தம்புத்தேகமயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதுவெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 51 பேரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே குறித்த 51 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள 17,000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து நீரை பயன்படுத்தவுள்ளதாகக் கூறியயே குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த 51 பேரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM