கடத்தப்பட்டவர்கள் தொடர்பான குற்றத்தை தண்டனைச் சட்டத்தில் கொண்டு வந்து அக் குற்றத்திற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக புத்திக பத்திரண எம்.பி. முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
காணாமல் போனவர்கள் என்ற விடயத்தில் தமிழர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டதோடு, முஸ்லிம்களும் இதனால் பாதிப்புகளை சந்தித்தார்கள். காணாமல் போனவர்களில் சிங்களச் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் என்ற சான்றிதழ் வழங்கும் விடயத்தில் ஐ.நா சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
எமது வடக்கு, கிழக்கு மாகாண உறுப்பினர் ஒருவர் காணாமல் போனார். ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்று இன்றும் தெரியாது. இந் நிலையில் அவரது தாயார் இன்னமும் அவர் உயிரோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடனேயே வாழ்ந்து வருகின்றார்.
எனவே பலவந்தமாக கடத்தல் தொடர்பான குற்றத்தை எமது தண்டனை மட்டத்தில் கொண்டு வரவேண்டும். அத்தோடு பரணகம ஆணைக்குழு உட்பட பல ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளுக்கமைய கடத்தலை தண்டனைக்குறிய குற்றமாக்கி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.
Close
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM