சூடு­பி­டிக்­கி­றது கூட்­டத்­தொடர் : இலங்கை பதி­ல­ளிக்கும்.!

Published By: Robert

05 Mar, 2018 | 11:50 AM
image

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின்  37 ஆவது கூட்டத்  தொடரில் நடை­பெ­ற­வுள்ள  இலங்கை  தொடர்­பான  உப­குழுக் கூட்­டங்­களில்   சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி  தொடர்பில்  வலி­யு­றுத்­த­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

குறிப்­பாக அமெ­ரிக்கா கனடா பிரிட்டன் உள்­ளிட்ட நாடு­களின் பிர­தி­நி­திகள் இந்த உப­குழுக் கூட்­டங்­களில் பங்­கேற்று உரை­யாற்­ற­வுள்­ள­தாக   எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

ஜெனி­வாவில் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில்   14  உபக்­கு­ழுக்­கூட்­டங்கள்  ஜெனிவா மனித  உரிமை பேரவை வளா­கத்தில்  நடை­பெ­ற­வுள்­ளன.  

எதிர்­வரும் 12ஆம் திகதி பாரதி கலா­சார அமைப்­பினால்  இலங்கை  மனித உரிமை விவ­காரம் தொடர்பில்  ஒரு உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.   மனித உரி­மை­பே­ரவை வளா­கத்தின்  23 ஆம் இலக்க   அறையில் இந்த உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அதே­போன்று 13 ஆம்­தி­கதி தமிழ் உலகம் என்ற அமைப்­பினால் இலங்கை தொடர்பில் ஒரு உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 7 ஆம் இலக்க அறையில் நடத்­தப்­ப­ட­வுள்ள இந்த உபக்­கு­ழுக்­கூட்­டத்தில் பல்­வேறு  தரப்­பினர் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். 

14 ஆம்­தி­கதி புத்­து­ரு­வாக்க சமூக திட்ட முன்­னணி என்ற அமைப்­பினால்  மற்­று­மொரு இலங்கை தொடர்­பான  விசேட உப­கு­ழுக்­கூட்டம்  21ஆம் இலக்க அறையில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 15 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஒரு சர்­வ­தேச  மனித உரிமை அமைப்­பினால் இலங்கை விவ­காரம்  தொடர்பில் விசேட உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

குறிப்­பாக இலங்­கையில் தன்­னிச்­சை­யாக  தடுத்­து­வைத்தல் விவ­காரம் தொடர்­பி­லேயே  இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதில் பல்­வேறு தரப்­பினர் கலந்து கொண்டு இலங்கை விவ­காரம் தொடர்பில் உரை­யாற்­ற­வுள்­ளனர். 21 ஆம் இலக்க அறையில்  இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  

அத்­துடன்  எதிர்­வரும் 16ஆம் திகதி   இலங்கை மனித  உரிமை விவ­காரம் தொடர்பில் பசுமைத் தாயகம் அமைப்­பினால் ஒரு உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  அந்­தக்­கூட்­டமும் 21ஆம் இலக்க அறை­யி­லேயே   நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

மேலும்  மற்­று­மொரு சர்­வ­தேச  அமைப்­பினால் எதிர்­வரும் 19 ஆம்­தி­கதி   ஜெனிவா மனித உரிமை பேரவை வளா­கத்தில் 24ஆம் இலக்க அறையில் ஒரு  உப­கு­ழுக்­கூட்டம்  நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  இந்­தக்­கூட்­ட­மா­னது இலங்கை விவ­காரம் தொடர்பில்   ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில்   நடை­பெ­ற­வுள்­ளது. 

இது இவ்­வா­றி­ருக்க பசுமை தாயகம் அமைப்­பினால் மற்­று­மொரு இலங்கை தொடர்­பான  உபக்­கு­ழுக்­கூட்டம் 20 ஆம்­தி­கதி 25 ஆம் இலக்க  அறையில் நடை­பெ­ற­வுள்­ளது.  இலங்­கையின் நிலை­மா­று­கால நீதி தொடர்­பாக இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அதே தினத்­தன்று சர்­வ­தேச   பௌத்த நிவா­ரண அமைப்­பினால் இலங்கை தொடர்­பான ஒரு விசேட உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.   27ஆம் இலக்க அறையில்  இந்த உப­கு­ழுக்­கூட்டம்  நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  அந்­த­வ­கையில் இந்த   அனைத்து   உபக்­கு­ழுக்­கூட்­டங்­க­ளிலும் இலங்கை  தொடர்­பான  விட­யங்கள்  ஆரா­யப்­ப­ட­வுள்­ளன.   இவை உள்­ள­டங்­க­ளாக    மொத்­த­மாக 14  உப­குழுக் கூட்­டங்கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. 

இந்த அனைத்துக் கூட்­டங்­க­ளிலும் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள்  கலந்­து­கொண்டு   இலங்­கையின் நீதிப்­பொ­றி­முறை குறித்து  வலி­யு­றுத்­த­வுள்­ளனர். ஏற்­க­னவே  கடந்த அமர்வில்   உரை­யாற்­றிய  கனடா நாட்டின் வெளி­வி­வ­கார அமைச்சர் இலங்கை அர­சாங்கம் பொது­ந­ல­வாய மற்றும் சர்­வ­தேச விசா­ர­ணை­யா­ளர்கள் நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்­கான அர்ப்­ப­ணிப்பை வெ ளிக்­காட்ட வேண்டும்  என்று குறிப்­பிட்­டி­ருந்தார். 

இதே­வேளை  இலங்கை விவ­காரம் தொடர்பில்  பாதிக்­கப்­பட்ட மக்கள்    தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள்  மற்றும்   தென்­னி­லங்கை   பொது அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் என   பல்­வேறு  தரப்­பி­னரும் கலந்­து­கொண்டு  உப நிகழ்­வு­களில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன்  பல­ரையும் சந்­தித்து    பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்­ளனர்.  

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் எம்.பி.க்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுடன்   ஐந்­து­பேரைக் கொண்ட குழு ஜெனிவா நோக்கி செல்­ல­வுள்­ளது.  அத்­துடன்  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­களும் இம்­முறை ஜெனிவா நோக்கி பய­ணிக்­க­வுள்­ளனர்.   குறிப்­பாக அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் ஏற்­பாட்டின் அடிப்­ப­டையில்    வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின்   ஒவ்­வொரு மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும்   தெரிவு  செய்­யப்­பட்ட  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.   

தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் சார்பில்    அதன் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும்   செல்­வ­ராஜா கஜேந்­திரன் உள்­ளிட்ட பல்­வேறு  உறுப்­பி­னர்­களைக் கொண்ட குழுவும்  இம்­முறை  ஜெனி­வாவில் முகாமிட்டு  பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை தொடர்பில் எடுத்துக்கூறவுள்ளனர்.    

தென்னிலங்கையின் ""எலிய"" அமைப்பின் பிரதிநிதியான முன்னாள் பிரதி அமைச்சர்   சரத் வீரசேகரவும்   ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு    பிரசாரம் செய்யவிருக்கிறார். அதாவது இலங்கை அராங்கம்   இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் செயிட் அல் ஹுசைன்  கூறுகின்ற  அனைத்தையும்  அரசாங்கம் கேட்பதாகவும் அவர்    ஜெனிவாவில் எடுத்துக்கூறவுள்ளதாகவும்  அறிவித்துள்ளார்.  சரத் வீரசேகர  அடுத்தவாரம் ஜெனிவா செல்லவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09