சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 8 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மதுபோதையில் இருந்தவர்களையும் நேற்று மாலை ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தொடக்கம் ஹட்டன் மல்லியப்பு வரையிலான பகுதிகளிலும், தியகல பகுதிகளிலும் நேற்று மாலை பல வாகனங்களை தீடிரென ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர்.
இதன்போது, வெவ்வேறு வாகனங்களில் பயணித்த 8 பேரிடமிருந்து கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து, குறித்த 8 பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM