உலகின் மிகப்பெரிய அதிசயம் மனிதன் என்றால் மனிதனை உருவாக்கிய கருமுட்டையும் விந்தணுவும் அதைவிட அதிசயமானவை. அவை எவ்வளவு சிறியனவோ அவ்வளவு பெரிய இரகசியத்தை உள்ளடக்கி வைத்திருக்கின்றன. கருவிற்கு தேவையான மரபணுக்கள் தாயின் கருமுட்டையிலும் தந்தையின் விந்தணுவிலும் இருக்கும். விந்தணு கருமுட்டையை அடைவதற்குள் பெரிய போராட்டமே நடந்திருக்கும்.
கருப்பையின் நுழைவுச் சுவர்களில் இருக்கும் நாடாக்கள் போன்ற அமைப்பில் சிக்கி பாதி விந்தணுக்கள் காணாமல் போக, பிளவுபட்ட வால் மற்றும் வாலே இல்லாத விந்தணு என பாதி விந்தணுக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட, நீந்தத் திறனற்ற விந்தணுக்கள் பாதியிலேயே விருப்ப ஓய்வு எடுத்து கொள்ள, மிச்சம் இருக்கும் சொற்ப அளவு விந்தணுக்கள் தான் கருமுட்டை இருக்கும் இடத்தின் அருகிலேயே செல்லும். முதலில் கருமுட்டையை அடையும் விந்தணு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஓர் இரசாயன சமிக்ஞை வெளியிடப்படும். இதனால் கருமுட்டைக்குள் செல்ல முயற்சி செய்யும் மற்ற விந்தணுக்களுக்கு மின் அதிர்வு போன்ற ஒரு விளைவு ஏற்படும். ஆகையால் ஒன்றுக்கும் மேற்பட்ட விந்தணுக்கள் கருமுட்டைக்குள் நுழைவது தடுக்கப்படும்.
இப்படி, பல தணிக்கைகளுக்கு பிறகு திரைக்கு வரும் மனிதம் என்னும் படத்தில் கதாநாயகனாகக் கொண்டாடப்படுவது விந்தணுக்கள்தான். கருமுட்டை என்பது விந்தணுக்காக காத்து நிற்கும் கதாநாயகி போலவே சித்தரிக்கப்படுகிறது.
ஆனால், ெஹாப்கின்சன் (Hopkinson) பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு இந்தக் கதையை மாற்றி அமைத்திருக்கிறது. இந்த ஆய்வின் முடிவுபடி கருமுட்டையை முதலில் அடையும் விந்தணுவை தற்போக்குத்தனமாக (random selection) அது ஏற்றுக்கொள்வதில்லை. தனக்குள் அனுமதிக்கும் முன் விந்தணுவை பலகட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்துகிறது முட்டை. மரபியல் ரீதியான குறைபாடு இருக்கும் விந்தணுவை நிராகரித்து தன்னிடம் இருக்கும் குரோமோசோம்க்கு பொருத்தமான இணையை உடைய விந்தணுவை தனக்குள் அனுமதிக்கிறது. ஆகையால் படத்தின் இறுதியில் முக்கியமான முடிவு எடுக்கும் கதாபாத்திரமாக மாறுகிறது பெண்ணின் கருமுட்டை.
மனிதர்களைப் போலவே இயற்கையின் மற்ற படைப்புகளிலும் இனப்பெருக்க அறிவியல் வியக்கத்தக்க அமைப்புகளை கொண்டிருக்கிறது. சால்மன் (salmon) மற்றும் டிரெளட் (trout) மீன்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை, ஆனால், வேறுபட்ட வகைகள். சால்மன் முட்டையுடன் டிரெளட் விந்தணுவைக் கலந்தபொழுது கருத்தரிப்பு சாத்தியமானது. ஆனால், சால்மன் முட்டையுடன் இரண்டு மீன்களின் விந்தணுவையும் கலந்த போது தன்னுடைய இனத்தைச் சேர்ந்த விந்தணுவை மட்டும்தான் கருத்தரிக்க அனுமதித்தது முட்டை. அசாதாரணமான சூழ்நிலைகளில் ஓர் இனத்தைப் பாதுகாக்க பரிணாம வளர்ச்சியின் ஏற்பாடுதான் இது. தன் சொந்த இனத்தின் விந்தணு இல்லாத போது, இன்னோர் இனத்தின் விந்தணு மூலம் இனப்பெருக்கம் உறுதி செய்யப்படுகிறது.
இன்னும் சில உயிரினங்களில் ஆணின் விந்தணுக்கள் இல்லாமலேயே கருத்தரிப்பு சாத்தியமாகிறது.
சில பாலூட்டிகளில் இனச்சேர்க்கைக்கு பிறகு விந்தணு பெண்ணின் கருப்பையில் சேகரித்து வைக்கப்படும். அவை நேரடியாக கருத்தரிக்க அனுமதிக்கப்படுவதில்லை. மற்றோர் ஆண் விலங்குடன் இனச்சேர்க்கை நடந்த பிறகு அதன் விந்தணுவையும் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட விந்தணுவையும் ஒப்பீடு செய்து அவற்றுள் சிறந்த விந்தணுவைதான் கருத்தரிக்க அனுமதிக்கிறது (cryptic female selection) பெண் விலங்கு. இந்த ஆராய்ச்சிகள் மூலம் இனப்பெருக்கத்தில் பெண்ணின் கருமுட்டை (passive partner)குறைந்த அளவு பங்களிப்பை தான் தருகிறது என்ற கருத்து மாற்றியமைக்கப்படுகிறது.
இனி, விந்தணுக்களின் தீரத்தை போலவே கருமுட்டையின் காத்திருப்பும் போற்றுதலுக்குரியது. ஏனென்றால் முட்டைதான் இறுதி முடிவெடுக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM