கூட்­ட­ணியின் செய­லாளர் சங்­க­ரிக்கு எதி­ராக தலைவர் பொலிஸில் முறைப்­பாடு

Published By: Priyatharshan

03 Mar, 2018 | 10:20 AM
image

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்குள் ஏற்­பட்­டுள்ள குழப்­பத்­தை­ய­டுத்து, கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் ஆனந்த சங்­க­ரிக்கு எதி­ராக யாழ்.பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் புதிய தலை­வ­ராக கடந்த வருடம் தெரி­வு­செய்­யப்­பட்ட சிவ­சுப்­பி­ர­ம­ணி­யத்­தினால் செய­லாளர் நாய­கத்­திற்கு எதி­ராக இந்த முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. 

 கூட்­ட­ணியின் உயர்­மட்ட கூட்­ட­மொன்று யாழ்.நாச்­சிமார் கோவில் வீதியில் உள்ள கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்­றது. இக் கூட்­டத்­திற்கு கூட்­ட­ணியின் தலைவர் சிவ­சுப்­பி­ர­ம­ணி­யத்­திற்கு அறி­வித்தல் வழங்­கப்­ப­ட­வில்லை. இருந்­த­போதும் அக்கூட்­டத்­திற்கு சென்ற தலை­வரை கூட்­டத்தில் பங்­கு­கொள்­வ­தற்கு செய­லாளர் நாயகம் ஆனந்­த­சங்­கரி அனு­ம­திக்­க­வில்லை. இதனால் குறித்த இரு­வ­ருக்கும் இடையில் முரண்­பாடு ஏற்­பட்­டது. இந்­நி­லையில் ஆனந்­த­சங்­கரி மற்றும் சிவ­சுப்­பி­ர­ம­ணி­யத்­திற்கு இடையில் ஏற்­பட்ட வாய் தர்க்­கத்­தை­ய­டுத்து தலை­வ­ரினால் யாழ்.பொலிஸ் நிலை­யத்தில் ஆனந்­த­சங்­க­ரிக்கு எதி­ராக முறைப்­பாடு பதி­வு­ செய்­யப்­பட்­டது.

அம் முறைப்­பாட்டில், தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் ஆனந்­த­சங்­கரி தன்னை தகாத வார்த்­தை­களால் பேசி­ய­தா­கவும், தனது சேட்டை பிடித்து  தாக்க முற்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மு­றைப்­பாட்டை அடுத்து மேல­திக விசா­ர­ணை­களை யாழ்.பொலிஸார் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இதே­வேளை இச் சம்­பவம் தொடர்­பாக கூட்­ட­ணியின் தலைவர் சிவ­சுப்­பி­ர­ம­ணியம் தெரி­விக்­கையில், 

தற்­போது கட்­சியின் செயற்­பா­டுகள் தன்­னிச்­சை­யான முடி­வு­களின் அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும், கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தமக்கு தெரியப்படுத்தப்படவில்லை எனவும் இவ்வாறான நிலையிலேயே இன்றைய (நேற்றைய) சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31