மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி : ஒருவர் காயம்

Published By: Robert

12 Feb, 2016 | 03:27 PM
image

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் மாவடிவேம்பு பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கள் விபத்தில் இளைஞனொருவர் பலியாகியுள்ளதுடன் மேலுமொருவர் காயமடைந்துள்ளதாக ஏறாவுர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கிரான் விஷ்ணு ஆலய வீதியைச் சேர்ந்த குணராசா குணநிதன் (21) என்ற இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

கிரானிலிருந்து தனது நண்பன் சகிதம் மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு நோக்கி வேகமாக வந்த குறித்த இளைஞன் மாவடிவேம்பு பதியில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு அருகிலிருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பாக ஏறாவுர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14