சட்டம் ஒழுங்கு அமைச்சராக உங்களை நியமிப்பதற்கு பொலிஸ் அதிகாரிகளும் தேரர்களும் விரும்புகின்றார்கள் இல்லை என்று அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அமைச்சரவை மாற்றத்தின் போது சரத் பொன்சேகாவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது ஆனால் இதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே பொலிஸ் அதிகாரிகள், மற்றும் பௌத்த தேரர்களின் எதிர்ப்பின் காரணமாகவே இந்த அமைச்சை வழங்க முடியாதுள்ளதாக ஜனாதிபதி சரத் பொன்சேகாவிடம் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உட்பட பொலிஸ் அதிகாரிகள் இந்த நியமனத்தை விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை அமைச்சர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM