மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஓய்வுபெற்ற கிராமசேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கதிரவெளி – புச்சாக்கேணி எல்லைக்குச் சமீபமாக பால்பண்ணைக்கு அருகில் இடம்பெற்ற இவ்விபத்தில் கதிரவெளியை வசிப்பிடமாகக் கொண்ட குழந்தைவேல் சிங்காரவேல் (வயது 68) எனும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்தையேற்படுத்திய வாகன சாரதியைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
கதிரவெளியில் தனது உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறிவிட்டு நேற்று திங்கட்கிழமை இரவு 7.50 மணியளவில் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சம்பவத்தில் இறந்த ஓய்வுபெற்ற கிராம சேவகர் பயணித்துள்ளார்.
அந்நேரம் கதிரவெளியிலிருந்து வாகரைப் பக்கமாக கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த கன்டெர் ரக வாகனம் ஓய்வுபெற்ற கிராம சேவகர் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பலியான ஓய்வுபெற்ற கிராம சேவகரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM