மனதை வாசிக்கும் செயற்கை மதிநுட்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறந்த அன்புக்குரியவர்களை அச்சு அசலாக பிரதிபலிக்கும் வகையிலான நடத்தையைக் கொண்ட ரோபோக்களை உருவாக்க முடியும் என சுவீடன் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்கள் இறந்த உறவினர்களை மேற்படி ரோபோ உருவாக்கத்திற்கான ஆய்வுக்கு தாமாக முன்வந்து உட்படுத்த விரும்புபவர்களைத் தேடி வருவதாக கூறப்படுகிறது.
இந்த ரோபோக்கள் இறந்த உறவினர்களது குரலில் அவர்களைப் போன்று உரையாடும் வல்லமையைக் கொண்டுள்ளதால் அவை இறந்த அன்புக்குரியவர்கள் இல்லாத குறையை பயன்பாட்டாளர்களுக்கு நிவர்த்தி செய்யும் என மேற்படி ஆய்வில் பங்கேற்றுள்ள கலாநிதி மிசியோ ககு கூறினார்.
மனதை வாசிக்கும் ஆற்றலைக் கொண்ட ரோபோ இயந்திரங்களில் எமது அல்லது எமது அன்புக்குரியவர்களின் மனதின் மாதிரியை பதிவேற்றம் செய்வதன் மூலம் நாம் அல்லது எமது அன்புக்குரியர்கள் இறக்கும் போது எம்மை அல்லது அவர்களைப் போன்று அச்சு அசலான குரலிலும் மனோபாவத்துடனும் உணர்ச்சிகளுடனும் உரையாடக்கூடிய ரோபோக்களை எதிர்காலத்தில் உருவாக்குவது சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.
இந்த ரோபோக்கள் எதிர்வரும் 10 அல்லது 20 ஆண்டுகளல் பயன்பாட்டுக்கு வரும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM