இரட்டையர்களான தனது மகள்மாரை 10 வருடகாலமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பட்டினியால் வாட வைத்து அவர்களில் ஒருவரை இரு தடவை கர்ப்பமடையச் செய்து தாயாக்கிய குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க மின்னேபொலிஸ் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜெரி லீ கறி (51 வயது) என்பவரே இவ்வாறு தனது மகள்மாரிடம் தகாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜெரி மூலம் கர்ப்பமடைந்த அவரது இரட்டை மகள்மாரில் ஒருவர் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமும் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமும் குழந்தைகளைப் பிரசவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் அந்த இரட்டையர்களின் தாயாரான 48 வயதுப் பெண் எங்குள்ளார் என்பதை இதுவரை அறியமுடியாதுள்ளதாகவும் அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் ஜெரி தனது மூன்றாவது மகளான 10 வயது சிறுமியொருவரையும் அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இரட்டையர்களில் ஒருவர் தமது தந்தையிடமிருந்து தப்பி வந்து பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்தே மேற்படி குற்றச்செயல் அம்பலத்துக்கு வந்துள்ளது.
அந்த 20 வயதுகளிலுள்ள இரட்டைச் சகோதரிகள் மனநலம் பெரிதும் பாதிகப்பட்ட நிலையில் உள்ளதாகவும் அவர்களில் ஒருவர் 6 அல்லது 7 வயதுக் குழந்தையொருவருக்குரிய நடத்தையைக் கொண்டுள்ளதாகவும் அவர்களைப் பரிசோதித்த சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெரி இரட்டைச் சகோதரிகளான தனது மகள்மாரை நிர்வாண நிலையில் சங்கிலியால் கட்டி வீட்டில் சிறை வைத்திருந்ததாகவும் இந்நிலையில் இருந்த இடத்திலேயே இயற்கைக் கடன்களைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளான அவர்கள் தமது சொந்த மலம் மற்றும் சிறுநீர் மீது படுத்திருக்க நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் ஜெரி தனது மகள்மாரை கைமுஷ்டியாலும் பந்து விளையாடுவதற்கு பயன்படும் மட்டையாலும் துடைப்பக் கட்டையாலும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM