இரட்­டை­யர்­க­ளான மகள்­மாரை 10 வரு­டங்­க­ளாக சங்­கி­லியால் கட்டி வைத்து பாலியல் வல்­லு­றவு : தந்தை கைது

26 Feb, 2018 | 12:15 PM
image

இரட்­டை­யர்­க­ளான தனது  மகள்­மாரை 10  வருடகால­மாக  பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி பட்­டி­னியால் வாட வைத்து அவர்­களில்  ஒரு­வரை இரு  தடவை கர்ப்­ப­ம­டையச் செய்து தாயாக்­கிய குற்­றச்­சாட்டில்  தந்­தை­யொ­ருவர் கைது­செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க மின்­னே­பொலிஸ் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

ஜெரி லீ கறி (51  வயது)  என்­ப­வரே இவ்­வாறு  தனது மகள்­மா­ரிடம் தகாத நட­வ­டிக்­கையில்  ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.

ஜெரி மூலம் கர்ப்பமடைந்த அவ­ரது இரட்டை மகள்­மாரில் ஒருவர் 2014  ஆம் ஆண்டு ஜூன் மாதமும்   2017  ஆம்  ஆண்டு  ஒக்­டோபர் மாதமும் குழந்­தை­களைப் பிர­ச­வித்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 அதே­ச­மயம் அந்த இரட்­டை­யர்­களின் தாயா­ரான 48  வயதுப் பெண் எங்­குள்ளார் என்­பதை  இது­வரை  அறி­ய­மு­டி­யா­துள்­ள­தா­கவும் அவரைத் தேடும் நட­வ­டிக்­கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பிராந்­திய பொலிஸார் கூறு­கின்­றனர்.

 மேலும் ஜெரி   தனது  மூன்­றா­வது மக­ளான 10  வயது சிறு­மி­யொ­ரு­வ­ரையும்  அடித்து உதைத்து துன்­பு­றுத்தி வந்­துள்ளார்.

இரட்­டை­யர்­களில் ஒருவர் தமது தந்­தை­யி­ட­மி­ருந்து தப்பி வந்து பொலி­ஸா­ரிடம் செய்த  முறைப்­பாட்­டை­ய­டுத்தே மேற்­படி  குற்­றச்­செயல் அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது.

 அந்த 20  வய­த­ுக­ளி­லுள்ள  இரட்டைச் சகோ­த­ரிகள் மனநலம்  பெரிதும் பாதி­கப்­பட்ட நிலையில்  உள்­ள­தா­கவும்  அவர்­களில் ஒருவர் 6  அல்­லது 7  வயதுக் குழந்­தை­யொ­ரு­வ­ருக்­கு­ரிய  நடத்­தையைக் கொண்­டுள்­ள­தா­கவும் அவர்­களைப் பரி­சோ­தித்த சுகா­தார நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஜெரி  இரட்டைச் சகோ­த­ரி­க­ளான தனது மகள்­மாரை   நிர்­வாண நிலையில் சங்­கி­லியால் கட்டி  வீட்டில் சிறை வைத்­தி­ருந்­த­தா­கவும் இந்­நி­லையில் இருந்த இடத்திலேயே   இயற்கைக் கடன்­களைக்  கழிக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்­குள்­ளான அவர்கள் தமது சொந்த மலம் மற்றும் சிறுநீர் மீது  படுத்­தி­ருக்க நேர்ந்­த­தாகவும்  கூறப்­ப­டு­கி­றது.

 அத்­துடன்  ஜெரி தனது மகள்­மாரை கைமுஷ்­டி­யாலும் பந்து விளை­யா­டு­வ­தற்கு பயன்­படும் மட்­டை­யாலும்  துடைப்­பக் ­கட்­டை­யாலும் அடித்து துன்­பு­றுத்தி வந்­துள்ளார்.

இந்­நி­லையில் மேற்­படி சம்­பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசா­ர­ணை­களை  முன்­னெ­டுத்­துள்­ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34