வவுனியா - பட்டாணிசூர், 2 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் வேளையில் வீட்டிற்குள் புகுந்த திருடன் அங்கிருந்த பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா - பட்டாணிசூர் 2ஆம் ஒழுங்கையில் சிறிதரன் மலர்வதனி வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இன்று மதியம் 11 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்ற சமயத்தில் வீட்டின் கதவினை திறந்து அலுமாரியினையுடைத்து அதனுள் இருந்த சுமார் 9 பவுன் நகைளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
2.15 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கபட்டதை அவதானித்த குறித்த பெண் உடனடியாக அவரச தொலைபேசியிலக்கமான 119 க்கு அழைப்பினை ஏற்படுத்தி சம்பவத்தினை தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க தலமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM