மாலைதீவு பாராளுமன்றமானது சர்வதேச ரீதியான கடும் கண்டனத்துக்கு மத்தியில் அந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை மேலும் 30 நாட்களால் நீடிப்பதற்கு ஆதரவளித்து வாக்களித்துள்ளது.
மேற்படி அவசரகால சட்டத்திற்கு இலங்கையின் சபாநாயகர் கரு ஜெயசூரிய உள்ளடங்கலாக தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியினரின் செல்வாக்கிலுள்ள மேற்படி பாராளுமன்றத்தின் தீர்மானமானது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் தலைநகரில் எதிர்க்கட்சி ஆதரவாளர்களால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
கடந்த பெப்ரவரி மாதம் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யமீனால் பிறப்பிக்கப்பட்ட 15 நாள் அவசரகால சட்டம் ஏற்கனவே உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனத்தைச் சம்பாதித்துள்ள நிலையிலேயே அந்த சட்டம் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பை தான் நிறைவேற்றத் தவறியமை குறித்து தன்னை கைதுசெய்வதற்கு அந்த நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பிக்கலாம் என அஞ்சிய யமீன், அவசரகால சட்டத்தைப் பிரகடனப்படுத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் பிறிதொரு நீதிபதியையும் கைதுசெய்வதற்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அத்துடன் பல எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் இந்த அவசரகால சட்டத்தின் போது கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM