நாளை ஆரம்­ப­மாகி­ன்றது கச்­ச­தீவு புனித அந்தோனியார் ஆலய பெரு­விழா

Published By: Robert

22 Feb, 2018 | 09:34 AM
image

இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­ க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­ விழா நாளை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்ப ­மா­கின்­றது. 

நாளை வெள்­ளிக்­கி­ழமை மாலை 4 மணிக்கு கொடி­யேற்­றத்­துடன் நற்­க­ருணைப் பெரு­விழாத் திருப்­பலி வழி­பா­டுகள் நடை­பெறும். நாளை மறு­தினம் சனிக்­கி­ழமை காலை 7 மணிக்கு யாழ்.மறை­மா­வட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை மற்றும் காலி மறை­மா­வட்ட ஆயர் றேமன் விக்­கி­ர­ம­சிங்க ஆண்­டகை ஆகியோர் இணைந்து பெரு­விழா கூட்டுத் திருப்­பலியை நிறை­வேற்­ற­வுள்­ளனர். 

இப்பெரு­விழாத் திருப்­ப­லியில் இந்­தி­யாவின் சிவ­கங்கை மறை­மா­வட்ட குரு­மு­தல்வர் தலை­மையில் அருட்­தந்­தை­யர்கள், அருட்­ச­கோ­த­ரிகள் கலந்­து­கொள்­ளவுள்ளனர். அத்­துடன் இந்­தி­யா­வி­லி­ருந்து 3 ஆயி­ரத் துக்கும் மேற்­பட்ட யாத்­தி­ரிகர்கள் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும் இந்­திய யாத்­தி­ரிகர்கள் சார்பில் கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆல­யத்­திற்­கான கொடி­மரம் அங்­கி­ருந்து எடுத்­து­வ­ரப்­ப­ட­வுள்­ள­தாக நெடுந்தீவு பங்குத்தந்தை எமில்போல் அடிகளார் தெரிவித்தார்.

கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய பெரு­வி­ழா­வுக்கு இம்­முறை இலங்கை மற்றும் இந்­திய நாடு­க­ளி­லி­ருந்து 10 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பக்­தர்கள் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதற்கு ஏற்­ற­வ­கையில் போக்­கு­வ­ரத்து மற்றும் அத்­தி­யா­வ­சிய விசேட ஏற்­பா­டுகள் என்­பன அங்கு ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கச்­ச­தீ­வுக்கு செல்­வ­தற்கு வச­தி­யாக யாழ்.மத்­திய பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து 23ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை 3.30 மணி­யி­லி­ருந்து குறி­காட்­டுவான் இறங்­கு­து­றைக்கு பேருந்து சேவைகள் இடம்­பெறும். இதற்கு மேல­தி­க­மாக தனியார் பேருந்து போக்­கு­வ­ரத்து சேவை­களில் ஈடு­­படும். அன்­றைய தினம் காலை 5 மணி­யி­லி­ருந்து நண்­பகல் 2 மணிவரை குறி­காட்­டுவான் இறங்­கு­து­றை­யி­லி­ருந்து கச்­ச­தீ­வுக்­கான கடல்­வழி படகுச் சேவைகள் இடம்­பெறும். 

படகுச் சேவைக்­கான ஒரு­வழி கட்டண­ மாக குறி­காட்­டு­வானிலிருந்து 300 ரூபாவும் நெடுந்­தீவில் இருந்து கச்­ச­தீ­வுக்கு ஒரு­வழி பயணக் கட்­ட­ண­மாக 225 ரூபாவும் அற­வி­டப்­படும். சேவையில் ஈடு­படும் பட­குகள் யாவும் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே சேவைக்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வுள் ­ளது. பய­ணி­களின் பாது­காப்புக் கருதி பாது­காப்பு அங்­கியை அணி­வது  கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

திரு­வி­ழா ஒழுங்­கு­க­ளுக்­கு­ரிய பிர­தான பொறுப்பை கடற்­ப­டை­யினர் ஏற்­றுள்­ளனர். அதேபோன்று ஏனைய துறை­யினர் ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்­டதன்படி தத்­த­மது சேவை­களை மேற்­கொள்­வார்கள். பக்தர்­ களின் நலன்­க­ருதி நிரந்­தர மல­சலகூட வச­திகள் மற்றும் மேல­தி­க­மாக தற்­கா­லிக மல­சலகூட வச­திகள் என்­ப­னவும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

கச்­ச­தீவு திருத்­தல திரு­வி­ழா­வுக்கு வரும் யாத்­தி­ரி­கர்கள் தமக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை தாமே எடுத்து­ வர வேண்டும் எனவும் அறி­வு­றுத்­தப்பட் ­டுள்­ள­துடன் கச்சதீவு பிரதேசத்தில் பொலித் தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் படகுச் சேவை இடம்பெறும் போது கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19