வாய்மூடி இருந்த சுமந்திரன் ஏன் இறுதி நேரத்தில் குழப்பினார் ; திட்டமிட்ட சதியென்கிறார் வாசு

Published By: Priyatharshan

21 Feb, 2018 | 11:05 PM
image

(எம். எம். மின்ஹாஜ், ஆர்.யசி)

 பிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து விவாதத்தை தடுத்தனர். இது திட்டமிட்ட  சதியென கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்வைத்த கோரிக்கை நியாயமானது, சட்ட விதிமுறைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது என சுமந்திரன் வாசுவின் குற்றச்சாட்டை நிராகரித்தார். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றுகையில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார கூறுகையில்,

மத்திய வங்கி பிணைமுறி அணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் நேற்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவிருந்தது. இவை குறித்து விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவிருந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் நானே விவாதிக்க தயாரானேன்.

எனினும் பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மொழியில் இல்லாத காரணத்தினால் தம்மால் விவாதத்தில் ஈடுபட முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரன் சபையில் முரண்பட்டார். அவரது  கோரிக்கையின் நியாயத்தை கருத்தில் கொண்டு விவாதத்தை பிற்போட முடியும் என்பதை நானும் ஏற்றுக்கொண்டேன்.

எனினும் அதன் பின்னர் ஆராய்ந்து பார்த்ததில் கடந்த 6 ஆம் திகதி நடத்தவிருந்த விவாதத்தின் போது  மொழி பெயர்ப்பு பிரச்சினையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிபடுத்தவில்லை. பாரளுமன்ற செயற்பாடுகள் தொடர்பிலான கூட்டத்திலும் இந்த பிரச்சினையினை முன்வைக்கவில்லை.

அப்போதெல்லாம் வாய்மூடி இருந்த சுமந்திரன் ஏன் இறுதி நேரத்தில் விவாதத்தை குழப்பினார். ஏனெனில் பிணைமுறி அறிக்கை குறித்து நாம் சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க வேண்டும் என்ற தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. பிரதமரும் நெருக்கடியில் இருந்த நிலையில் இவர்கள் இரு தரப்பும் இணைந்து முன்னெடுத்த சதியென நான் சபையில் குற்றம் சுமத்துகின்றேன் எனக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36