(எம். எம். மின்ஹாஜ், ஆர்.யசி)
பிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து விவாதத்தை தடுத்தனர். இது திட்டமிட்ட சதியென கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்வைத்த கோரிக்கை நியாயமானது, சட்ட விதிமுறைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது என சுமந்திரன் வாசுவின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றுகையில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார கூறுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி அணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் நேற்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவிருந்தது. இவை குறித்து விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவிருந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் நானே விவாதிக்க தயாரானேன்.
எனினும் பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மொழியில் இல்லாத காரணத்தினால் தம்மால் விவாதத்தில் ஈடுபட முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரன் சபையில் முரண்பட்டார். அவரது கோரிக்கையின் நியாயத்தை கருத்தில் கொண்டு விவாதத்தை பிற்போட முடியும் என்பதை நானும் ஏற்றுக்கொண்டேன்.
எனினும் அதன் பின்னர் ஆராய்ந்து பார்த்ததில் கடந்த 6 ஆம் திகதி நடத்தவிருந்த விவாதத்தின் போது மொழி பெயர்ப்பு பிரச்சினையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிபடுத்தவில்லை. பாரளுமன்ற செயற்பாடுகள் தொடர்பிலான கூட்டத்திலும் இந்த பிரச்சினையினை முன்வைக்கவில்லை.
அப்போதெல்லாம் வாய்மூடி இருந்த சுமந்திரன் ஏன் இறுதி நேரத்தில் விவாதத்தை குழப்பினார். ஏனெனில் பிணைமுறி அறிக்கை குறித்து நாம் சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க வேண்டும் என்ற தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. பிரதமரும் நெருக்கடியில் இருந்த நிலையில் இவர்கள் இரு தரப்பும் இணைந்து முன்னெடுத்த சதியென நான் சபையில் குற்றம் சுமத்துகின்றேன் எனக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM