ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை கணேச வித்தியாலய வீதியை அண்டிய பகுதியின் கொட்டில் ஒன்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை மீட்டு உடற் கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை மீட்கப்பட்ட இச்சடலம் அப்பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சண்முகரெத்தினம் பிரதீபாவினுடையது என பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளனர்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த யுவதி அப்பகுதியிலுள்ள கடையொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார்.
வழமை போன்று கடைக்குச் செல்பவர் இன்று கடைக்குத் தயாராகவில்லை என பெற்றோர் தேடியபோது வீட்டோடு சேர்ந்ததாக அமைக்கப்பட்டிருந்த கொட்டிலுக்குள் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தகவல் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் விரிவான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
இந்த யுவதியை திருமணம் செய்வதாக உறுதியளித்திருந்த நபர் தான் வெளிநாட்டுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்ல வேண்டும் என்ற உத்தேசத்தை யுவதியிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி சுமார் 2 இலட்சம் ரூபாய் பணத்தை யுவதி வட்டிக்கு கடனாகப் பெற்று செலுத்தி வந்ததாகவும் கடைசியில் அந்த ஆண் நண்பர் வெளிநாடு செல்வதைக் கைவிட்டு விட்டதாகவும் இதனால் யுவதி தான் பெற்றுக் கொடுத்த கடன் தொகையை செலுத்த முடியாமலும், நம்பிக்கைத் துரோகத்தால் விரக்தியடைந்திருந்ததாகவும் உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பொலிஸார் குறித்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM