தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் பாரிய குப்பைமேடொன்று திடீரெனச் சரிந்ததில் 17 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொசாம்பிக் நாட்டின் சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அங்குள்ள மபுடோ நகரின் புறநகர் பகுதிகளில் நகரம் முழுவதும் சேரும் குப்பைகள் ஒன்றாக கொட்டி குவிக்கப்படுகின்றன.
பல ஆண்டுகளாக அங்கு கொட்டப்படும் குப்பைகள் சுமார் மூன்று மாடி கட்டிடத்தின் உயரம் அளவுக்கு குவிந்துள்ளன.
கனமழை பெய்து வரும் நிலையில் குறித்த குப்பை மேடு திடீரென சரிந்து விழுந்தது இதில் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வரை 17 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இவ் விபத்து குறித்து தேசிய பேரிடர் மீட்பு அதிகாரி கூறுகையில்,
“குப்பை மேடு சரிந்து அருகாமையில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. மேலும் சில குடும்பங்கள் இதில் சிக்கியிருக்க கூடும் என அஞ்சுகிறோம்” என கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM