இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இலங்கையின் 50ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரானது தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை -– இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதும் இந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு போட்டித் தொடரானது இருபதுக்கு 20 போட்டியாக நடத்தப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகும் இத் தொடர் மார்ச் மாதம் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இரவு போட்டியாக நடைபெறவுள்ளன.
இத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – இந்தியா மோதுகின்றன.
மார்ச் 8: பங்களாதேஷ் – இந்தியா
மார்ச் 10: இலங்கை – பங்களாதேஷ்
மார்ச் 12: இலங்கை -– இந்தியா
மார்ச் 14: பங்களாதேஷ் – இந்தியா
மார்ச் 16: இலங்கை – பங்களாதேஷ் ஆகிய
அணிகள் மோதுகின்றன. இத் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM