வீடெங்கும் வளர்ப்புப் பிராணி களின் மலம் சிதறிக் கிடப்பதாக குற்றஞ்சாட்டி அதனை சுத்திகரிக்கக் காதலன் கோரியதால் சினமடைந்த பெண்ணொருவர், அந்தக் காதலனது பிறப்புறுப்பை கிழித்தெறிய முயற்சித்து அவரை படுகாயத்துக்குள்ளாக்கிய விபரீத சம்பவம் அமெரிக்க ஜோர்ஜியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
அகஸ்டா நகரைச் சேர்ந்த மெலிண்டா டில்லாஷோவ் (47 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தனது காதலரின் பிறப்புறுப்பை காயப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் படுகாயமடைந்து இரத்தம் வழிந்தோட வலியால் துடித்த காதலருக்கு உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ உத்தியோகத்தர்களால் சிகிச்சையளிக்கப்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் மெலிண்டா கூறுகையில்,
பிராணிகளின் மலத்தை சுத்திகரிக்கக் கோரிய தனது காதலர் அதனையடுத்து இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது தன்னை கழுத்தை நெரித்து படுகொலை செய்ய முற்பட்டதாகவும் இதன்போது தற்பாதுகாப்புக் கருதியே அத் தாக்குதலை நடத்த நேர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள் ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM