”20ஆம் திகதி பாரிய போராட்டம்” காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வுகள்

Published By: Robert

18 Feb, 2018 | 10:26 AM
image

எமக்கு இறு­தி­யாக கிடைத்த மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்­தி­ரி ­பால சிறி­சேன ஆகிய இரண்டு ஜனா­தி­ப­தி­களும் கொழுக்­கட்­டையும், மோத­கமும் போன்­ற­வர்கள். உருவம் வேறாக இருந்­தாலும் அவர்­களின் செயற்­பா­டுகள் ஒன்­றா­கவே இருக்­கின்­றன.  என கிளி­நொச்சி மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் இணைப்­பாளர் லீலா­வதி தெரிவித்­துள்ளார். 

கிளி­நொச்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் போராட்டம் மேற்­கொள்ளும் இடத்தில் நேற்­றைய தினம் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து உரை­யாற்­றி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். 

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில், 

தென்­னி­லங்­கையில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் மாற்­றத்­தினால் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் விட­யத்தில் எவ்­வித மாற்­றத்­தி­னையும் எதிர்ப்­பார்க்க முடி­ய­வில்லை. 

இரண்டு ஜனா­தி­ப­தியும் எமது பிள்­ளைகள் தொடர்பில் பல கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். மாறாக அவர்­களால் எமக்கு எவ்­வித முடி­வு­க­ளையும் பெற்றுத் தர­மு­டி­யா­துள்­ளது. எமக்கு எமது பிள்­ளை­களே வேண்டும். 

நாம் வீதி போராட்­டத்­தினை ஆரம்­பித்து எதிர்­வரும் 20ஆம் திக­தி­யுடன் ஒரு வருடம் பூர்த்­தி­யா­கின்­றது. இது­வரை எமக்கு உத­விய அனைத்து சிவில் அமைப்­புக்கள், பொது­மக்கள், வர்த்­த­கர்கள், அர­சி­யல்­வா­திகள் அனை­வ­ருக்கும் நன்றி தெரி­விக்­கின்றோம். 

எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை நாம் பாரிய அள­வி­லான போராட்டம் ஒன்றை ஐ.நாவிற்கு கேட்கும் வகையில் முன்­னெ­டுக்க உள்ளோம். 

இதற்கு ஒத்­து­ழைக்கும் வகையில் வர்த்­த­கர்கள் பொது­மக்கள் சிவில் அமைப்­ட­புக்­க­ளி­னு­டைய ஒத்­து­ழைப்­பி­னையும் வேண்டி நிற்­கின்றோம். அன்றைய தினம் வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி எமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31