மெக்ஸிக்கோவைச் சேர்ந்த குற்றவியல் ஊடகவியலாளர் ஒருவர் தலை பிளாஸ்ரிக் பையால் மூடப்பட்ட நிலையில் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு பிள்ளைகளின் தாயாரான அனாபெல்புளோரஸ் சலஸார் என்ற மேற்படி பெண் ஊடகவியலாளர், இராணுவச் சீருடை அணிந்து வந்த 8 ஆயுததாரிகளால் கடத்தப்பட்டதையடுத்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எல்ஸோல் டி ஒறிஸபா பத்திரிகையில் ஊடகவியலாளராக கடமையாற்றிய அவர் வெராகுருஸ் மாநிலத்திலுள்ள தனது வீட்டில் இருந்த வேளை, இராணுவ சீருடையில் வந்த ஆயுததாரிகள் அவரைக் கைதுசெய்வதற்கான கைது ஆணை தம்மிடம் உள்ளதாக தெரிவித்து அவரை அழைத்துச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் அவரது சடலம் அருகிலுள்ள புயப்லா மாகாணத்திலுள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
மெக்ஸிக்கோவில் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து கொல்லப்பட்ட 11 ஊடக வியலாளர்களில் 6 பேர் வெராகுருஸ் மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM