மகள் காதல் திருமணம் செய்து கொண்டது பிடிக்காததால் ஆத்திரம் அடைந்த தந்தை தன் மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதோடு அதனை வெளியிட்டதாக மகளின் காதல் கணவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது அம்பலமாகி உள்ளது.
இந்தியா பெங்களூர் கல்யாண்நகர் அருகே, முச்சக்கரவண்டி சாரதியும் வாகனங்களை திருத்தும் வேலை செய்து வரும் 27 வயது நபர் மீது சைபர் கிரைம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம் முறைப்பாட்டில்,
“கல்லூரி மாணவியான என் மகளை குறித்த முச்சக்கர வண்டி சாரதி காதலித்து வந்தார். அவளுக்கு காதலர் தினத்தில் உள்ளாடைகளை பரிசளித்து அதனை அணிந்து கொண்டு அதனை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பும் படி கூறி இருக்கிறார். அதன்படி என் மகள் அனுப்பிய வீடியோவை வைத்துக்கொண்டு 15 லட்சம் ரூபா தரவேண்டும் இல்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சைபர் கிரைம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கல்லூரி மாணவி குறித்த முச்சக்கர வண்டி சாரதி வீட்டில் இருப்பது தெரிந்தது. அதனை தொடர்ந்து தீவிர விசாரணை நடாத்திய பொலிஸாரிடம்,
முச்சக்கர வண்டி சாரதி,
"15 லட்சம் ரூபா கொடுக்காவிட்டால் ஆபாச படத்தை வெளியிடுவேன் என்று நான் மிரட்டவில்லை. நானும் கல்லூரி மாணவியான என் மனைவியும் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறோம். அது பிடிக்காமல் அவளின் தந்தை பொய் புகார் கொடுத்து இருக்கிறார்.” என்று கூறினார்.
இது பொலிஸாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு புகார் கொடுத்த மாணவியின் தந்தையை பொலிஸார் விசாரணை செய்ததில்,
மகளின் ஆபாச வீடியோவை தந்தையே சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. கல்லூரி மாணவி ஆமுச்சக்கர வண்டி சாரதியை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இது தந்தைக்கு பிடிக்கவில்லை. மகளை அவளது காதல் கணவனிடம் இருந்து பிரிக்க முடிவு செய்துள்ளார். இந்த நேரத்தில் மகள் ஏற்கனவே தன் காதலனுக்கு அனுப்பி இருந்த ஆபாச வீடியோ தந்தைக்கு கிடைத்துள்ளது.
இதனை துருப்பு சீட்டாக பயன்படுத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அந்த பழியை மகளின் காதல் கணவர் மீது போட முடிவு செய்து உள்ளார்.
தனது ஆபாச படத்தை கணவர்தான் வெளியிட்டு இருக்கிறார் என்று தெரிந்தால் மகள் அவனை பிரிந்து வந்துவிடுவாள் என்று கணக்குபோட்டுள்ளார்.
அதன்படி மகள் என்றும் பாராமல் அவளது ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது.
மகளை காதல் கணவரிடம் இருந்து பிரிக்க அவளது ஆபாச படத்தை தந்தையே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM