மஞ்சள் கடவையில் பெண்ணை மோதிய பேருந்து

Published By: Devika

17 Feb, 2018 | 12:13 PM
image

மஞ்சள் கடவையில் வீதியைக் கடக்க முயற்சித்த பெண், அரச பேருந்து மோதி பலியானார். இச்சம்பவம் இன்று (17) காலை கேகாலை, கரந்துபன சந்தியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடவையில் நின்றிருந்த பெண் வீதியைக் கடக்க முயற்சித்தார். அப்போது, கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து அவர் மீது மோதியது.

மோதிய வேகத்தில் தூக்கியெறியப்பட்ட அந்தப் பெண், ஸ்தலத்திலேயே பலியானார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், பேருந்து சாரதியைக் கைது செய்தனர்.

பலியானவர், அரனாயக்க, உஸ்ஸபிட்டியவைச் சேர்ந்த 68 வயதுப் பெண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாதசாரிக் கடவையில் இவ்விபத்து இடம்பெற்றது குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21