நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை குறித்து தீர்மானம் எடுக்க முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழப்ப நிலையில் உள்ளார். இந்நிலையில் நாடு எதிர்கொண்டுள்ள உள்ளக மற்றும் சர்வதேச ரீதியிலான நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு பிரதமர் பதவியை வழங்குவது பொருத்தமற்ற விடயம் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் பதவி தொடர்பில் நாட்டில் இடம் பெற்று வரும் மாறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பொதுபல சேனா அமைப் பின் நிறைவேற்று பணிப்பாளர் டிலாந்த விதானகே கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் எவரும் எதிர்பார்க்காத வண்ணம் கிடைக்கப் பெற்றுள்ளன. பிரதேச மற்றும் நகர சபைகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கவே பாரிய செலவுகளின் மத்தியில் தேர்தல் இடம்பெற்றது. தேர்தல் நடத்துவதில் காணப்பட்ட நோக்கம் தற்போது மாற்றம் அடைந்துள்ளது . பிரதேச ரீதியில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு பதிலாக தேசிய அரசாங்கத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் பதவி தேசிய அரசாங்கத்தில் குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது . ஆனால் தற்போது அந்த பதவி நிலையே பாரிய சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளது .இந்நிலையில் குறித்த பிரதமர் பதவிக்கு நல்லாட்சி அரசாங்கம் நிமல் சிறிபால டி சில்வாவை பரிந்துரை செய்துள்ளமை சாத்தியமற்றதாக காணப்படுகின்றது. உள்ளூராட்சி சபைகளின் பிரதான நோக்கம் பிரதேச அபிவிருத்தியை மேம்படுத்துவதாகும். ஆனால் குறித்த உள்ளூராட்சி மன்றத் தேர் தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்துவதில் குறித்த கட்சிகள் கவனம் செலுத்தி தேசிய அரசின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
பிரதமர் பதவி குறித்து யாரை நியமிப்பது என்பது தொடர்பில் நாட்டு தலைவர் குழப்பம் அடைந்துள்ள நிலையில் கட்சிகள் தமது அரசியல் நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு பிரதமர் பதவிக்கு பக்கச்சார்பாக பரிந்துரைகளை மேற்கொள்வது தற்போதைய அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்துவதாக காணப்படுகின்றது. பிரதமர் பதவிக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் வெளிப்படையாக தேசிய நலனில் அக்கறையுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி திரைமறைவில் பல்வேறு சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
நாடு பாரிய அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் நாட்டின் தலைவர் பிரதமர் பதவியை பொருத்தமா னவரிடம் கையளிப்பது நிகழ் கால அரசி யல் தேவையாக காணப்படுகின்றது. ஆகவே ஜனாதிபதி தீர்க்கமாக சிந்தித்து நாட்டு நலன்கருதி துரிதமான தீர்மானத்தினை மேற் கொள்வது அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM