பிரதமரின் அதிரடி அறிவிப்பு.!

Published By: Robert

16 Feb, 2018 | 05:07 PM
image

தனது பிரதமர் பதவி தொடரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சற்று முன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி முடித்தார். அதில் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

சந்திப்பின்போது சரமாரியாக எழுந்த கேள்விக்கணைகளுக்கு இன்முகம் மாறாமல் பதிலளித்தார் பிரதமர்.

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி பற்றிக் கேட்கப்பட்டபோது, இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து நடத்தும் ஆட்சி எனும்போது இவ்வாறான பிரச்சினைகள் தோன்றுவது இயல்பே என்று கூறிய அவர், இதுபோன்ற பிரச்சினைகள் எழாவிட்டால் ஊடகங்களுக்கு சுவாரசியம் இல்லாமல் போய்விடுமே என்று குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தனது நிலைப்பாட்டை பிரதமருக்கும் தெளிவாக எடுத்தியம்பியிருப்பதாகவும் எனினும் கூட்டாட்சிக்கு பங்கம் வரும் வகையில் எவ்விதமான ஆலோசனைகளோ, முடிவுகளோ எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மஹிந்தவைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மஹிந்த குடும்பத்தினர் மீது நானூறுக்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்திருப்பதாகவும் இதன் அடிப்படையில் தாம் மஹிந்தவைக் காப்பாற்றியதாகக் கூறப்படுவது அபத்தமானது என்றும் தெரிவித்தார்.

பிணைமுறி விவகாரமே அண்மைய தேர்தல் தோல்விக்குக் காரணமாக இருந்திருக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, அந்த விவகாரத்தில் மக்கள் உடனடித் தீர்ப்பை எதிர்பார்ப்பதாகவும் என்றபோதும் சட்ட நடவடிக்கைகளுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும் எதிர்காலத்தில் அந்த வழக்கை விரைந்து முடிக்க பரிந்துரைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். எவ்வாறெனினும் அந்த விவகாரத்தின் தாக்கம் தேர்தல் முடிவுகளைப் பாதித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்றும் அதை நீங்கள் எதிர்கொள்ளத் தயாரா என்றும் கேட்கப்பட்டபோது, அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் தமக்கான ஆதரவை மன்றில் காட்ட முடியும் என்று தெரிவித்தார்.

இந்திய விஜயத்தை இரத்துச் செய்தமை குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர், நாட்டின் தற்போதைய சூழலில், அரசில் நடக்கும் விவரங்களைத் தம் மூலமாகத் தெரிந்துகொள்ள உறுப்பினர்களும் மக்களும் ஆவலாக இருப்பதாகவும் இந்த நிலையில் தாம் இந்தியா மட்டுமன்றி எந்தவொரு நாட்டுக்கும் செல்வது பொருத்தமாக இருக்காது என்றும் கூறினார்.

அமைச்சரவையில் எவ்வாறான மாற்றங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன என்று கேட்கப்பட்டதற்கு, இன்னும் அது குறித்த ஆலோசனைகளே முன்வைக்கப்பட்டு வருவதாகவும் முடிவுகள் குறித்து போகப் போகத் தெரியும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19