முத்து சிவலிங்கம் பதவியிலிருந்து விலகினார் : தலைவராகவும், செயலாளராகவும் ஆறுமுகன் தொண்டமான்

Published By: Robert

16 Feb, 2018 | 12:13 PM
image

இலங்கை தொழிலளார் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து முத்து சிவலிங்கம் நீக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

அதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளர் பொறுப்பை மருதபாண்டி ரமேஷ்வரன் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுக்கூடல் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரியான சீ.எல்.எப்வில் இன்று காலை இடம்பெற்றது.

காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூட்டப்பட்ட தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை காலமும் காங்கிரஸின் தலைவராக செயல்பட்ட வந்த பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தான் தலைவர் பதவியிலிருந்து விலகி கொள்வதாக தெரிவித்திருந்தார்.

அதேவேளை, அவருக்கு காங்கிரஸின் போசகராக பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, நிதி காரியதரிசியாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரனுக்கு வழங்க நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இந்த பதவியை வழங்கியுள்ளது.

காங்கிரஸின் பொது செயலாளராக இருந்த என்னை எதிர்வரும் காலங்களில் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை வகிக்க வேண்டும் என நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஊடாக ஏகமனதாக ஏற்றுக்கொண்டு பொறுப்புகளை வழங்கியதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் சந்திப்பு ஒன்றை ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று நடத்தினார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் மத்திய மற்றும் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், உப தலைவர் கணேசமூர்த்தி, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், ஏ.பி.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்,

நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகள் 11யை கூட்டு இணைவோடு கைப்பற்றிக்கொண்டமை தொடர்பில் ஜனாதிபதியிடம் விபரித்தோம். அத்தோடு எதிர்காலத்தில் நிதிகள் ஒதுக்கப்படுவதன் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினோம் என்றார்.

மேலும், மிக நீண்ட நாட்களாக பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என ஜனாதிபதியின் ஊடாக வழியுறுத்தப்பட்டு இருந்து. ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம்.

இவருடன் இணைந்த பிறகு நாம் பதவிகளை பெற்றுக்கொள்வோம் என எண்ணியிருந்தோம். அதேவேளை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இவருடன் இணைந்து பாரிய வெற்றிகளை பெற்றுக்கொண்டதனால் எமக்கு கிடைத்த இந்த பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56