எத்தியோப்பிய பிரதமர் ஹெயில்மரியம் டிசலின் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக ஆளும் கட்சியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் குழப்ப நிலை தீவிரமடைந்து வந்துள்ளது.
இந்த குழப்ப நிலை மற்றும் போராட்டங்கள் என்பவற்றை தடுக்கும் நோக்கில் இவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எத்தியோப்பியா, ஆபிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.
ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், ஆபிரிக்காவிலேயே நைஜீரியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இதுவாகும். இதன் தலைநகர் அடிஸ் அபாபா.
ஹெயில்மரியம் டிசலின் கடந்த 2012 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.
அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் வளர்ச்சியில் கிடைக்கும் பயன்கள் மற்றும் நன்மைகள் சாதாரண மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், எத்தியோப்பிய பிரதமர் ஹெயில்மரியம் டிசலின் நேற்று திடீரென தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எத்தியோப்பியாவில் நிலவிவந்த குழப்பங்களுக்கு தீர்வுகாண, பிரதமர் ஹெயில்மரியம் டிசலின் நீண்ட காலமாக முயற்சி செய்துவந்தார்.
ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஹெயில்மரியம் டிசலின் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கபடும் வரை ஹெயில்மரியம் டிசலின் பிரதமர் பதவியில் நீடிப்பார் எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM