இலங்கையில் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவரான என்.சண்முகதாசன் மறைவின் 25 ஆவது வருடாந்த நினைவை முன்னிட்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பெப்ரவரி 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது.
பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையிலான இந் நிகழ்வில் தமிழகத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பேராசிரியர் அ.மார்க்ஸ் " மார்க்சியத்தின் சமீபத்திய போக்குகளும் உலகமய பொருளாதாரத்தில் தொழிலாளர் இயக்கங்களின் எதிர்காலமும்" எனும் தொனிப்பொருளில் உரைநிகழ்த்துகிறார்.
வரவேற்புரையை முரளிதரன் மயூரனும் சிறப்புரையை மார்க்சிய - லெனினிச புதிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான சி.கா.செந்திவேலும் நன்றியுரையை பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கமும் நிகழ்த்துவார்கள்.
இந்நிகழ்வை மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் ஏற்பாடு செய்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM