நுவரெலியாவிலுள்ள விருந்தகமொன்றின் அறையிலிருந்து சீன பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டுப் பெண் தனது குடும்பத்தாரோடு சுற்றுலாவிற்காக நுவரெலியாவுக்கு சென்றுள்ளதாகவும் அவருடன் சென்ற ஏனைய 3 பெண்கள் வேறு ஒரு அறையிலும் சடலமாக மீட்கப்பட்ட பெண் தனியாக வேறு ஒரு அறையிலும் நித்திரை செய்ய செய்துள்ளனர்.
இந்நிலையில் தனிமையில் நித்திரை செய்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
47 வயதுடைய டாய்குயின் என்ற சீன நாட்டுப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளார்.
மரண விசாரணைக்காக நுவரெலியா நீதிவான் வரவழைக்கபட்டு சட்டவைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக சடலம் நுவரெலிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை இலங்கைக்கு வரவழைத்து சடலத்தை ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM