அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன் பிரதான வீதியில் நேற்று முன்தினம் காலை பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் காத்தான்குடி பீ.சி. வீதியைச் சேர்ந்த இஸ்மாலெவ்வை முஹம்மத் பாரூக் (59 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் பஸ் சாரதியைக் கைது செய்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது பஸ் சாரதியை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ரிதிதென்ன இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் அக்கரைப்பற்றிலிருந்து வாழைச்சேனை நோக்கி புறப்பட்டுச் சென்றபோது உயிரிழந்த பாரூக் என்பவர் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலைக்கு முன்னால் நின்று பஸ்ஸில் ஏறியுள்ளார்.
சுமார் 100 மீற்றர் தூரம் செல்வதற்கிடையில் மிதிபலகையிலிருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM