அர்ஜுன மகேந்திரனின் காலக்கெடு நிறைவு!

Published By: Devika

15 Feb, 2018 | 10:43 AM
image

மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி விளக்கமளிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை இன்றுடன் நிறைவுபெறுகிறது.

இலங்கைப் பிரஜை அல்லாத அர்ஜுன மகேந்திரன் தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகத் தெரியவருகிறது. 

மத்திய வங்கி பிணைமுறி ஊழலில், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோஷியஸ், அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன மற்றும் அர்ஜுன் அலோஷியஸின் மாமனாரும் மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோரை சந்தேக நபர்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கடந்த இரண்டாம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

அதன்பேரில், சுதந்திர தினமான பெப்ரவரி நான்காம் திகதி அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகிய இருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனிடையே, நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் அர்ஜுன மகேந்திரன் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி விளக்கமளிக்க இன்று 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இதுவரை அர்ஜுன மகேந்திரன் தரப்பு மௌனமாகவே இருந்து வருகிறது.

இது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ், அர்ஜுன மகேந்திரனை வரவழைப்பதற்கான எந்த முயற்சியையும் அரசு செய்யாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08