கடல் அட்டைகளுடன் இந்தியர்கள் கைது

Published By: Devika

14 Feb, 2018 | 07:24 PM
image

நுரைச்சோலை, கரம்ப பகுதியில் உள்ள வீடொன்றில், எதுவித ஆவணங்களும் இல்லாமல், சட்டவிரோதமாக கடல் அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தியர் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.  

கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 29, 48 மற்றும் 56 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

முப்பத்தொரு பொதிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 688 கிலோ எடையுடைய இந்தக் கடலட்டைகளின் மதிப்பு சுமார் இரண்டரைக் கோடி ரூபா எனத் தெரியவருகிறது.

அத்துடன், 21 பொதிகளில், உலர வைத்த சுறா மீன் செட்டைகள் 625 கிலோகிராமும் இதுவரையில் இலங்கைக்கு அறிமுகமில்லாத சில வகை கடல் உயிரினங்கள் 10 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைதான மூவரும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11