பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரான குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக குசல் மெண்டிஸை அணியில் இணைத்துக் கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை – பங்களாதேஷ் இருபதுக்கு 20 தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நேற்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய குசல் ஜனித் பெரேரா இந்தத் தொடரில் ஆடமாட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியின்போது காயமடைந்த குசல் இன்னும் அந்த காயத்திலிருந்து மீளாத காரணத்தால் அவர் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
அத்தோடு எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாக வுள்ள முத்தரப்பு இருபதுக்கு 20 தொடரில் குசல் ஜனித் பெரேரா கட்டாயமாக இடம் பெற வேண்டும் என்பதால் இந்தத் தொடரிலிருந்து அவர் விலகிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM