டயலொக் றக்பி லீக் தொடரை மீண்டுமொருமுறை கண்டி கழகத்திற்கு வென்றுகொடுத்துவிட்டு தனது றக்பி வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார் நட்சத்திர வீரரான பாசில் மரீஜா.
டயலொக் றக்பி லீக் தொடரின் நடப்பு பருவகாலத்திற்கான இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான கண்டி விளையாட்டுக் கழகத்துக்கு ஹெவ்ெலாக் விளையாட்டுக் கழகம் அதிர்ச்சி தரும் வகையில் செயற்பட்டிருந்த போதிலும் பாசில் மரீஜாவின் இறுதிநேர அபார ஆட்டத்தோடு கண்டி விளையாட்டுக் கழகம் 30 – -28 என வெற்றி பெற்று 2017–18ஆம் பருவத்துக்கான டயலொக் றக்பி லீக் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தது.
கண்டி மைதானத்தில் நடைபெற்ற தீர்மானமிக்க இந்தப் போட்டியானது இலங்கை தேசிய றக்பி அணியின் முன்னாள் தலைவர் பாசில் மரீஜாவின் கழக றக்பி தொடர்களின் பிரியாவிடைப் போட்டியாகவும் அமைந்திருந்தது.
இப்போட்டியின் முதல் புள்ளிகள் கண்டி அணிக்கு கிடைக்கப்பெற்றன. பின்னர் பாசில் மரீஜா தனக்கு கிடைத்த இடைவெளிகளினூடாகச் சென்று போட்டியின் இரண்டாவது ட்ரைைய வைத்திருந்தார்.
இதனையடுத்து கண்டி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு ஒன்றின் மூலம் ரத்வத்த தனது தரப்புக்கு மேலும் 3 புள்ளிகளை சேர்த்துக் கொடுத்தார்.
முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய கண்டி கழகத்திற்கு இரண்டாவது பாதியில் கடும் சவாலாக விளங்கியது ஹெவ்லொக் கழகம்.
இதனையடுத்து ஹெவ்லொக் அணியின் விஸ்வரூப ஆட்டம் ஆரம்பமாகியது. ரீசா முபாரக், தாபரே போன்றோரின் உதவியோடு ஹெவ்லொக் அணிக்கு மிகவும் தேவையாக இருந்த அவ்வணியின் முதல் ட்ரை சூரியாரச்சியினால் பெறப்பட்டிருந்தது.
சில நிமிடங்களில் முதல் பாதியில் புள்ளிகளே பெறாத ஹெவ்லொக் கழகம் இரண்டாம் பாதியில் அபாரமாக ஆடி கண்டியின் புள்ளிகள் எண்ணிக்கையை நெருங்கியது.
ஆனாலும் கண்டி தனது புள்ளிகளை 30 வரை உயர்த்திக் கொண்டதால் ஆட்டத்தின் இறுதியில் 30–28 என்ற புள்ளிகள் அடிப்படையில் கண்டி கழகம் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM