இருப்பது போதாது என்று இவர் வேறா?

Published By: Devika

13 Feb, 2018 | 07:23 PM
image

மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும் என, இந்திய அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த தேர்தலில் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இலங்கை அரசியலில் மீண்டும் ராஜபக்ச உறுதியான முறையில் முதன்மை பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. அவர் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும்” என, சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

தனது ட்வீட்டில், சீனாவுடனான மஹிந்தவின் நெருங்கிய உறவைச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், “வெளிநாட்டு உறவில் எவ்வாறு இயங்க வேண்டும் என்று இந்தியா தெரிந்துகொள்ள வேண்டும். வெளியுறவுக் கொள்கையில் எதுவும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டதோ அல்லது உங்களுக்குப் பிடித்தவாறு அமையவேண்டும் என்பதோ இல்லை. அதை எமக்குத் தேவையான மாதிரி மாற்றிக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு அடிக்கடி வருகை தந்தவர் சுப்ரமணியன் சுவாமி என்பதுடன், அவருக்கும் மஹிந்தவுக்கும் இடையில் சுமுகமான உறவு இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51