கொழும்பின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ படம் எடுத்தமை தொடர்பில் இராணுவத்தின் கெப்டன் தரத்தை உடைய வைத்தியர் ஒருவர், இரு லான்ஸ் கோப்ரல் தர சாரதிகள் உள்ளிட்ட மூவரை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, மது, கஞ்சா சுருட்டு போன்றவற்றை உபயோகிக்கச் செய்து அவரை இவ்வாறு பாலியல் பலாத்காரத்துக்கு பல சந்தர்ப்பங்களில் உட்படுத்தியுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் பொறியியலாளர் எனக் கூறப்படும் ஒருவர் உள்ளிட்ட மூவரைத் தேடி தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்புக்கு பொறுப்பான பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்த, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸா ஆகியோரின் மேற்பார்வையில், உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன டி அல்விஸின் ஆலோசானைக்கு அமைவாக நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கயான் பிரசன்ன தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் லலித் பெத்தகத்த, பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஜனாகீ உள்ளிட்ட குழுவினர் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இராணுவ வைத்தியசாலையில் சேவையில் உள்ள கெப்டன் தரத்தை உடைய பல் வைத்தியரான சந்தேக நபர் அங்கு சேவையில் இருக்கும் அதே சமயம் தனியார் வைத்தியசாலை ஒன்றிலும் சேவை செய்துள்ளார். இதன்போது குறித்த தனியார் வைத்தியசாலையில் சேவையாற்றும் இளம் தாதி ஒருவருக்கும் வைத்தியருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
இரு பிள்ளைகளின் தந்தையான இராணுவ கெப்டன் தர வைத்தியர் அதனை மறைத்து காதல் செய்துள்ள நிலையில், இடையே புலமை பரிசில் ஒன்று பெற்று வெளிநாட்டுக்கு செல்ல அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வாறு அவர் வெளிநாடு சென்ற போது, இளம் தாதியின் தோழி ஒருவர் ஊடாக் குறித்த வைத்தியர் இரு பிள்ளைகளின் தந்தை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த தாதி வைத்தியரான இராணுவ கெப்டனின் தொலைபேசி அழைப்புக்களை புறக்கணித்துள்ளார்.
8 மாதங்களின் பின்னர் நாடு திரும்பியுள்ள வைத்தியர், குறித்த தாதியை வைத்தியசாலைக்கு சென்று சந்தித்து காதல் வசனம் பேசியுள்ளார். தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவரை மணப்பதாக அவர் உறுதி கொடுத்துள்ளார்.
அதன்பின்னரான ஒரு நாளில், குறித்த தாதியை, தனது வாகனத்தில் நிட்டம்புவ பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு அழைத்து சென்றுள்ள கெப்டன், அங்கு அவருக்கு மது, கஞ்சா சுருட்டு ஆகியவற்றை பலாத்காரமாக கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தனது சாரதியான லான்ஸ் கோப்ரலுக்கும் அவரை பலாத்காரம் செய்ய சந்தர்ப்பம் கொடுத்துள்ளார். இதன்போது அந்த பலாத்கார நடவடிக்கையை அவர் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து டயர் போட்டு எரிப்பதாக தாதியை அவர் மிரட்டியுள்ளார். பிறிதொரு தினத்தில் வைத்தியசாலைக்கு சென்று குறித்த தாதியை பலாத்காரமாக தன்னுடன் அழைத்துச் சென்றுள்ள கெப்டன், அவரை மொறட்டுவ பகுதியில் வீடொன்றுக்கு கூட்டிச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து, மது, கஞ்சாவை கொடுத்து அவரை துஷ்பிரயோகம் செய்துள்ள அவர், வீட்டில் இருந்த பொறியியலாளர் ஒருவருக்கும், அப்போது சாரதியாக இருந்த லான்ஸ் கோப்ரல் உள்ளிட்டவர்களுக்கும் துஷ்பிரயோகம் செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதனையும் அவர் வீடியோ எடுத்துள்ளார்.
குறித்த தாதி சேவையாற்றும் வைத்தியசாலையின் மின்னஞ்சல் முகவரிக்கு தாதியின் நிர்வாணப் படங்கள் சிலவற்றை கெப்டன் அனுப்பியுள்ள நிலையில், அதனை அறிந்த தாதி நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இந் நிலையிலேயே வைத்தியரான கெப்டன், லான்ஸ் கோப்ரல்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கெப்டன் தங்கியிருந்த இராணுவ குடியிருப்பை சோதனையிட்ட பொலிஸார் அங்கிருந்து துஷ்பிரயோக வீடியோ அடங்கிய இரு தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர். இந் நிலையிலேயே ஏனைய சந்தேக நபர்களைத் தேடி விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள் ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM