நாட்டில் இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சுயாதீன கண்காணிப்பு பணிகளில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கண்காணிப்பு பணிகளுக்காக 7 ஆயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கை வந்துள்ள சர்வதே கண்காணிப்புக் குழுவினரும் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முதல் தடவையாக கலப்பு முறைமையில் இடம்பெடவுள்ள நிலையில் இவற்றை கண்காணிக்கும் வகையிலும், புதிய முறைமையின் சாதக தன்மைகள் குறித்து ஆராயவும் சர்வதேச ஆய்வுக்குழுவினர் நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
இந்தோனேசியாவின் இரண்டு ஆய்வு அதிகாரிகளும், கொரியாவின் இரண்டு ஆய்வு அதிகாரிகளும், மாலைதீவில் இருந்து இரண்டு அதிகாரிகளும், இந்தியாவில் இருந்து நான்கு ஆய்வு அதிகாரிகளும் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் நேற்று நாட்டின் அதிகளவிலான பகுதிகளுக்கு விஜயம் செய்து தமது ஆய்வு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேபோல் தேர்தல் கடமைகளுக்காக கொழும்பிலிருந்து 400 அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவினர் சர்வதேச ஆய்வு பிரதிநிதிகளுடன் இணைந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணிக்கவுள்ளனர். தேர்தலில் வாக்குப்பதிவு நிலையங்களை ஒருங்கிணைப்பதற்காக இந்த அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இதில் சுயாதீன தேர்தல் குழுக்களும் பங்குகொள்ளவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்புக்கு அமைய அவர்கள் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இவர்கள் தேர்தல் தொடர்பில் தயாரித்த அறிக்கையை எதிர்வரும் 11 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க இலங்கையில் சுயாதீன கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க 7 ஆயிரம் பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியன ஒன்றிணைந்து இவ்வாறு தேர்தல் கண்காணிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM