இலங்கை – இந்திய – பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ள சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கெட் தொடரினால் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபாவரை இலாபம் கிடைக்கின்றது என்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
அத்தோடு இதுவரையில் இலங்கையில் நடைபெற்ற தொடர்களிலேயே அதிக இலாபத்தை ஈட்டிக்கொடுக்கும் ஒரு தொடராக சுதந்திரக் கிண்ணத் தொடர் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை – இந்தியா – பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் அரங்கில் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
சுதந்திரக் கிண்ணம் என்று பெயரிடப்பட்டு விளையாடப்படும் இந்தத் தொடர் ஏற்கனவே கடந்த 1998ஆம் ஆண்டு இலங்கையின் 50ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விளையாடப்பட்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக இம்முறை 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விளையாடப்படவுள்ளது.
இந்தத் தொடரின் மூலம் அதிக இலாபம் ஈட்டிக்கொள்ளும் நோக்குடன் சர்வதேச ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் முகவர்களுடன் கைகோர்த்துள்ளது.
அந்தவகையில் சர்வதேச ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் உரிமை மற்றும் விளம்பர உரிமை என்பவற்றில் அதிக இலாபம் ஈட்டியுள்ளதாம்.
இந்தத் தொடர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று கொழும்பு ஜெய்க் ஹில்டனில் நடைபெற்றது.
இதில் பேசிய இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால, இதுவரையில் இலங்கையில் நடைபெற்ற தொடர்களிலிருந்து சுதந்திரக் கிண்ணத் தொடர் வேறுபட்டுக் காணப்படும்.
இலங்கையில் இதுவரையில் இப்படியொரு தொடர் நடந்திருக்க வாய்ப்பில்லை என்கின்ற அளவிற்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
அத்தோடு சர்வதேச நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளதால் எமக்கு இந்தத் தொடரின் மூலம் 1000 மில்லியன் ரூபா வரை இலாபம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தத் தொடருக்காக ஸ்பைடர் கெமரா, ட்ரோன் கெமரா உட்பட அக்மண்ட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் தளத்திற்கு கிரிக்கெட்டை எடுத்துச்செல்லவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அக்மண்ட் ரியாலிட்டி தொழில்நுட்பம் கிரிக்கெட் ஊடாக இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதன்முறை என்பது விசேட அம்சமாகும்.
சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான பிரதான அனுசரணையை ஹீரோ மோட்டார் கோப் நிறுவனம் வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM