13, 374 நிலை­யங்­களில் நாளை வாக்­கெ­டுப்பு

Published By: Robert

09 Feb, 2018 | 10:47 AM
image

நாடு முழு­வதும் 341 உள்­ளூ­ராட்­சி­மன்றங்­க­ளுக்கு 8356 பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தற்­கான உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் வாக்­க­ளிப்பு நாளை  சனிக்­கி­ழமை காலை 7 மணி  முதல் மாலை  4 மணி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. 8356 பிர­தி­நி­தி­களை உள்ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு தெரிவு செய்ய 57256 வேட்­பா­ளர்கள் தேர்தல்  களத்தில் போட்­டி­யி­டு­கின்­றனர். 13, 374 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் நாளைய தினம் தேர்தல் வாக்­க­ளிப்பு நடை­பெ­ற­வுள்­ளது. நாளை நடை­பெ­ற­வுள்ள தேர் தல் வாக்­க­ளிப்பில் ஒரு கோடியே  57 இலட்­சத்து 60867  வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர். 

தேர்தல் வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்­கான  அனைத்து  ஏற்­பா­டு­களும்  தேர்தல் செய­ல­கத்­தினால்  பூர்த்தி செய்­யப்­பட்­டுள்ள நிலையில்   காலை  வேளை­யி­லேயே   வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்கு சென்று  வாக்­க­ளித்­து­விட்டு வரு­மாறு மக்கள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.    இதே­வேளை   வழக்கு நட­வ­டிக்கை கார­ண­மாக  எல்­பி்ட்­டிய   பிர­தேச சபைக்கு  தேர்தல் நடை­பெ­றாது என்றும்  அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

புதிய தேர்தல் முறைமை 

இம்­முறை  புதிய   வட்­டார மற்றும்   விகி­தா­சார முறை என  கலப்பு முறையில்    உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் நடை­பெ­று­கின்­றமை விசேட அம்­ச­மாகும்.  அதா­வது தொகுதி மூலம் 60 வீத­மான உறுப்­பி­னர்­களும்    விகி­தா­சாரம் மூலம் 40 வீத­மான உறுப்­பி­னர்­களும்     உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில்  தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்.    மேலும் விருப்பு வாக்கு முறைமை  இந்த தேர்தல் முறையில் இல்லை என்­ப­துடன்    பெண்­க­ளுக்­கான  இட ஓதுக்­கீடு    25 வீத­மாக உறு­தி­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

தேர்­தலில்  57256 வேட்­பா­ளர்கள் அர­சியல் கட்­சிகள் மற்றும்   சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக  கள­மி­றங்­கி­யுள்­ளனர்.  நாட்டில்  மொத்­த­மாக இரு­நூற்று எழு­பத்­தாறு பிர­தேச சபை­களும், 24 மாந­கர சபை­களும், நாற்­பத்­தொரு  உள்ள நிலை­யி­லேயே   அவற்­றுக்கு  இன்­றைய தினம்  தேர்தல் நடை­பெ­று­கின்­றது. 

பாது­காப்பு ஏற்­பா­டுகள்  

சனிக்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில்  நடை பெறும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை அமை­தி­யான முறையில் நடத்தி முடிக்க விஷேட பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. பொலிஸ், பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர், கல­கத்­த­டுப்பு பொலிஸார், சிவில் பாது­காப்பு படை­யினர், முப்­ப­டை­யி­னரை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த பரந்த பாது­காப்பு கட்­ட­மைப்­புடன் கூடிய நட­வ­டிக்கை நேற்று   9 ஆம் திகதி முதல் அமு­லுக்கு வந்­துள்­ளன. 

பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்பில்  4178 பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் உள்­ளிட்ட 65758 பொலிஸ் அதி­கா­ரிகள், உத்­தி­யோ­கத்­தர்­களைக் கொண்ட படை­யணி கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­படும். அவர்கள் நேற்று   அந்­தந்த பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­வு­க­ளுக்கு சென்று கட­மை­களைப் பொறுப்­பேற்று இன்று   முதல் தேர்தல் கட­மை­களில் குறிப்­பிட்ட பகு­தி­களில் பணியில் ஈடு­ப­டுவர். 

பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­படை வீரர்­க­ளுக்கு மேல­தி­க­மாக பொலிஸ் கல­க­ம­டக்கும் பிரிவின் வீரர்கள் 1106 பேரும் பொலிஸ் பாது­காப்பு உத­வி­யா­ளர்கள் 1320 பேரும் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் இவற்­றுக்கு மேல­தி­க­மாக சிவில் பாது­கா­பபு திணைக்­க­ளத்தின் 5953 பேர் கொண்ட படை­ய­ணி­யி­னரின் ஒத்­து­ழைப்பும் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும்  அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

அடை­யாளம் காணப்­பட்ட 155 இடங்­களில் இரா­ணுவ பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அது தொடர்பில் 855  முப்­படை வீரர்கள், பாது­க­பபுப் படை­ய­ணி­களின் கட்­டளைத் தலை­மை­ய­கத்தின் வழி நடத்­தலில் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.  

அவ­சர நிலை­மை­யொன்­றினை எதிர்­கொள்ளும் வித­மாக  மேலும் 6000 முப்­படை வீரர்­களைக் கொண்ட பாது­காப்பு படை­யணி நாட­ளா­விய ரீதியில் பல இடங்­களை மையப்­ப­டுத்தி தயார்ப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்கு யார் வரலாம்? 

இது இவ்­வாறு இருக்க வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்கு யார் வரலாம்  என்­பது   தொடர்­பான அறி­வித்­தலை   தேர்தல் செய­லகம் விடுத்­துள்­ளது. அதன்­படி குறித்த வாக்­கெ­டுப்பு நிலை­யத்தின் வாக்­கா­ளர்கள்,  வாக்­கெ­டுப்பு நிலைய உத்­தி­யோ­கத்­தர்கள்,   வேட்­பா­ளர்கள்,  (தமது  வட்­டா­ரத்தின்  வாக்­கெ­டுப்பு நிலை­யத்­திற்கு மட்டும்)   வாக்­கெ­டுப்பு நிலைய முக­வர்கள், கண்­கா­ணிப்­பா­ளர்கள், கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள பொலிஸ் அதி­கா­ரிகள், தெரி­வித்­தாட்சி அலு­வ­லர்கள், தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­களின் அனு­ம­தியைப் பெற்­றுள்ள நபர்கள் ஆகியோர் மட்­டுமே வாக்­க­ளிப்பு நிலைய வளா­கத்­திற்குள்   செல்ல முடியும். எந்­த­வொரு வேட்­பா­ளரும்,   வாக்­கெ­டுப்பு நிலை­யத்­திற்குள்  அல்­லது வாக்­க­ளிப்பு நிலைய சுற்று சூழலில் தரித்­தி­ருந்த கட்சி  மற்றும் வேட்­பாளர்  ஊக்­கு­விப்பு செயற்­பா­டு­களில் ஈடு­பட முடி­யாது. 

தடை­செய்­யப்­பட்­டுள்ள செயற்­பா­டுகள் 

மேலும்  வாக்­கெ­டுப்பு நிலை­யத்­துக்குள்  சில செயற்­பா­டுகள் முற்­றாக  தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக  தேர்தல் செய­லகம் அறி­வித்­துள்­ளது. கைய­டக்க தொலை­பே­சி­களை  பயன்­ப­டுத்தல், புகைப்­ப­டங்­களை எடுத்தல், வீடி­யோக காட்­சி­களை எடுத்தல், சுடு­க­லன்­களை வைத்­தி­ருத்தல், மற்றும்  புகைப்­பி­டித்தல், மது­பானம், போதைப்­பொருள் பாவனை ஆகி­ய­னவும்  முற்­றாக  தடை­செய்­யப்­பட்­டுள்­ளன. 

வாக்கு எண்ணும் நட­வ­டிக்­கைகள் 

தேர்தல்  காலை 7 மணி முதல் மாலை 4 மணி­வரை நடை­பெறும். 4.30 மணிக்கு  வாக்­கு­களை எண்ணும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பி­கக்ப்­படும். .  6 மணி­ய­ளவில்  வாக்கு எண்­ணிக்கை நிறை­வ­டைந்து அந்­தந்த  வாக்கு எண்ணும் நிலை­யங்­களில் முடிவை அறி­விக்க முடியும். வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளி­லேயே வாக்கு எண்ணும் நட­வ­டிக்கை இடம்­பெறும்.    இம்­முறை  தபால் மூல   தேர்தல் முடி­வுகள்  வெ ளியி­டப்­ப­டாது.  மாறாக   தபால் மூல வாக்­கு­களும்   வாக்­கெ­டுப்பில்  பெறப்­பட்ட வாக்குப் பெட்­டி­களில் கொட்­டப்­பட்டு எண்­ணப்­படும் என்று அறி்­விக்­கப்­பட்­டுள்­ளது. 

 அடை­யாள அட்டை அவ­சியம்  

வழ­மை­போன்று  தேர்­தலில் வாக்­க­ளிப்பு அடை­யாள  அட்­டையை  கொண்டு செல்­ல­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.     அதா­வது தேசிய அடை­யாள அட்டை,  அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சாரதி அனு­ம­திப்­பத்­திரம், செல்­லு­ப­டி­யான கட­வுச்­சீட்டு,  முதியோர் அடை­யாள அட்டை, ஓய்­வூ­திய அடை­யாள அட்டை, மத குருக்­க­ளுக்­கான அடை­யாள அட்டை, தேர்தல் திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­படும்  அடை­யாள அட்டை ஆகி­ய­னவே   தேர்­த­லுக்­கான  செல்­லு­ப­டி­யான அடை­யாள அட்­டை­க­ளாகும்.   

இதே­வேளை   உள்­ளூ­ராட்­சி­மன்ற  தேர்­த­லின்­போது எக்­கா­ரணம் கொண்டும் வெ ளிநாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட மாட்­டார்கள்  என்று   தேர்தல்  ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது.   உள்­நாட்டில்  இரண்டு கண்­கா­ணிப்பு அமைப்­புக்­க­ளுக்கு   தேர்­தலை கண்­கா­ணிப்­ப­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இன்று சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள நிலையில் தேர்தல் விதி­முறை படி  07 ஆம் திகதி நள்­ளி­ரவு 12 மணி­யுடன் தேர்தல் பிரச்­சாரப் பணிகள் அனைத்தும் முடி­வுக்கு வந்­தன.  கடந்த  2012 ஆம் ஆண்டு முதலில்  உள்­ளூ­ராட்­சி­மன்ற  தேர்­தலை   மாற்றி    புதிய கலப்பு  முறையில்  தேர்தலை நடத்துவதற்கான    சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

எனினும்  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர்   ஆரம்பத்தில் செய்யப்பட்ட எல்லை நிர்ணயங்களில் சிக்கல் இருப்பதாக  கட்சிகள் சுட்டிக்காட்டின.  அதன் பின்னர் மீண்டும் அந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன.    இந்நிலையில்  உள்ளூராட்சிமன்ற தேர்தல்  இரண்டு வருடங்களுக்கு மேல்   தாமதமடைந்தது. இறுதியில் கடந்த வருடத்தின் இறுதி பகுதியில்    இறுதி சட்டம் நிறைவேற்றப்பட்ட   புதிய  தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.   

கடந்த முறை  

இறுதியாக விகிதாசார முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாட்டில் முன்னூற்று முப்பத்தைந்து உள்ளூராட்சி மன்றங்கள் இருந்ததுடன் அம்மன்றங்களுக்கு நான்காயிரத்து நானூற்று எண்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01