நாளை நள்ளிரவு 12 மணி வரை அடையாள அட்டை விநியோகம்!!!

Published By: Digital Desk 7

08 Feb, 2018 | 04:10 PM
image

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை நாளை  நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்போவதாக ஆட்பதிவு ஆணையாளர் வியானி குணதிலக தெரிவித்தார்.

பொதுவான நாட்களில் ஒருநாள் சேவையின் கீழ் 1,000 அடையாள அட்டைகள் வரை விநியோகிக்கப்படும் என்றும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இதனை 2,000 வரை அதிகரிக்க இருப்பதாகவும் குணதிலக மேலும் தெரிவித்தார்.

இந் நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேர்தலுக்கு முன்னர் ஒருநாள் சேவையினூடாக வாக்காளர்களுக்கு துரிதமாக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதற்காக ஆட்பதிவு திணைக்களம் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும். நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டார். ஒருநாள் சேவையினூடாக மாத்திரமன்றி சாதாரண சேவையின் கீழ் தினமும் 2,500 முதல் 3,000 வரை அடையாள அட்டைகள் தபால் சேவையினூடாக விநியோகிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19