கல்யாணம் எப்போது? என்று அடிக்கடி விசாரித்த கர்ப்பிணி பெண்ணை வாலிபர் ஒருவர் ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.
இந்தோனேசியாவின் கம்பங் பாசிர் ஜோங் பகுதியில் வசித்து வரும் 28 வயதான வாலிபருக்கு திருமணம் ஆகவில்லை. இவரிடம் பக்கத்து வீட்டில் வசித்த திருமணமான 32 வயதான பெண் அடிக்கடி ‘நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்யவில்லை? எப்போது கல்யாணம்? உன் வயது பையன்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிவிட்டது. நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொள்’ என்று அறிவுரை கூறியுள்ளார்.
இப்படி பலமுறை கூறி வெறுப்பேற்றியதால் அவமானம் தாங்காத வாலிபர் அந்த பெண் மீது ஆத்திரம் கொண்டு கடந்த மாதம் 19ஆம் திகதி அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரை கொலை செய்துள்ளார்.
கர்ப்பிணியாக இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபர் அங்கிருந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு ஜகார்த்தாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
தகவலறிந்த பொலிஸார் குறித்த வாலிபரை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்த போது தப்பிக்க முயன்றுள்ளார்.அதனால் பொலிஸார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு பின்னர் கைது செய்துள்ளனர்.
குறித்த வாலிபர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM