வெளி­நாட்டில் போரா­டு­ப­வர்கள் உண்­மை­யான தமி­ழர்கள் அல்ல : கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல

Published By: Priyatharshan

08 Feb, 2018 | 10:20 AM
image

தமி­ழர்கள் என்று வெளி­நா­டு­களில் போரா­டு­ப­வர்கள் தமி­ழர்கள் என்ற  போர்­வையில் மாத்­தி­ரமே செயற்­ப­டு­கின்­றனர். இன,மத மொழி வேறு­பா­டுகள் இன்றி இலங்­கையர் என்ற ஒரு­மைப்­பாட்­டுடன் எம்­முடன் என்றும் இணைந்து செயற்­ப­டு­ப­வர்­களே தமி­ழர்கள்  என கூட்டு எதிர்­க்கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.

பிரித்­தா­னி­யாவின் இலங்கை தூத­ர­கத்தின் பாது­காப்பு அதி­கா­ரியின் பணி நீக்கம் மற்றும் மீள் பணி­ய­மர்த்தல் விவ­காரம் குறித்து குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மக்கள் மத்­தியில் தமது அதி­கா­ரத்­தினை பிர­யோ­கிப்­பதில் நல்­லாட்சி  அர­சாங்­கத்தின் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் பாரிய போட்டித் தன்மை காணப்­ப­டு­கின்­றது.  அதன் வெளிப்­பாடே பிரித்­தா­னி­யாவின் இலங்கை தூத­ர­கத்தின் பாது­காப்பு அதி­காரி பிரி­கே­டியர் பெர்­னாண்­டோவின்  பதவி நீக்கம் மற்றும் மீண்டும் பத­வியில் அமர்த்தல்  என்­பன  காணப்­ப­டு­கின்­றன.

பிர­தமர் பதவி நீக்­கு­வதும், பின்னர் ஜனா­தி­பதி தனது அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்தி  மீண்டும் பத­வியில் அமர்த்து­வதும்   அதி­கார துஷ்­பி­ர­யோ­கமே. பிர­த­மரின் கைப்பா­வை­யாக செயற்­ப­டு­வதை ஜனா­தி­பதி பிணைமுறி விவ­காரத்தில் நிரூ­பித்­து­விட்டார். திரு­ட­னி­டமே திருட்டின் திட்­டத்­தினை கேட்­ட­மை­யா­னது  இணக்­கப்­பா­டற்ற தன்­மை­யினை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி 2015ஆம் ஆண்டு  தொடக்கம் வெறும் நாம நிர்­வா­கி­யா­கவே செயற்­ப­டு­கின்றார். எதிர்­வரும் உள்­ளூராட்சி மன்ற தேர்­தலில் மக்­களின் ஆத­ர­வினை பெற்று ஐக்­கிய தேசிய கட்­சியின் சகல வித­மான தொடர்­பு­க­ளிலும் இருந்து விடுபட முயல்­கின்­ற­மை­யினை தேர்தல் பிரசா­ரங்­களில் வெளிப்­ப­டுத்தி வரு­கின்றார்.  

தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் பாரிய இணக்­கப்­பா­டற்ற தன்மை காணப்­ப­டு­கின்­ற­து.ஐக்­கிய தேசிய கட்சி தற்­போது மோச­டியால் தமது பாரம்­ப­ரிய அர­சியல் வர­லாற்றின் பெரு­மை­களை இழந்து விட்­டது.

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் பொது­மக்கள் நல்­லா ட்சி என்ற போர்­வையில் கபட  நாட­கத்­தினை அரங்கேற்றும் அர சாங்கத்திற்கு  எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த ஆவலாக உள்ளனர்.  பாரிய  மாற்றத்தினை எதிர்கொள்ள  இரு பிரதானகட்சிகளும் தயாராக  இருக்க வேண்டும். தாமரை மொட்டின் வெற்றி தற்போது உறுதியாக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38