‘எப்போது திருமணம்’ என்று கேள்வி கேட்டு நச்சரித்த கர்ப்பிணிப் பெண்ணை 28 வயது நபர் கொலை செய்த சம்பவம் இந்தோனேசியாவின் கம்ப்புங் பசிர் ஜோங் என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நூர்தீன் என்ற அந்த நபர் திருமணமாகாதவர். அவரது அயல்வீட்டுப் பெண் ஒரு கர்ப்பிணி. அவர் நூர்தீனைக் காணும்போதெல்லாம், எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறாய் என்று கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
தொடர்ச்சியாக இதே கேள்வியைக் கேட்டுக் குடைந்த கர்ப்பிணிப் பெண்ணின் தொந்தரவால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நூர்தீன், நேரே அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
பின்னர், அங்கிருந்த பணம் மற்றும் அந்தப் பெண்ணின் கைபேசியையும் திருடிச் சென்றார். எனினும் அவர் தலைமறைவாவதற்குள் பொலிஸார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுவீழ்த்திக் கைது செய்தனர்.
ஆயுட்காலச் சிறையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் நூர்தீன்!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM