நல்லாட்சியின் மோசடிகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பு.!

Published By: Robert

06 Feb, 2018 | 10:04 AM
image

எனது அமைச்­ச­ர­வையில் மோசடி இடம்­பெற்­றது என்றால் நானும் அதில் சம்­பந்­தப்­பட்­டுள்ளேன் என்று தான் அர்த்தம். அதே போன்று தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் உள்ள அமைச்­சர்கள் பெரும்­பா­லானோர் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். அப்­ப­டி­யென்றால் ஜனா­தி­ப­தியும் இணைந்து தான் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். 

பொலன்­ன­று­வையில் நேற்று முன்­தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்­பெற்ற தேர்தல் பிர­சா­ரத்தின் போதே அவர் இதனை தெரி­வித்தார். 

அங்கு அவர் மேலும்  உரை­யாற்­று­கை யில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு நாட்டின் தலைவர் போன்­றல்­லாமல் பொறுப்­பற்ற விதத்தில் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றார். ஊழல் மோச­டி­களில் ஈடுபட்­ட­வர்­களை நர­கத்­திற்கு அழைத்து செல்­லாமல் ஓயப்­போ­வ­தில்லை என அதி­க­மாக உணர்ச்­சி­வ­சப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின் றார். அவர் சற்று பொறு­மை­யாக இருக்க வேண்டும். இல்­லை­யெனில் அவ­ரது உடல் நலமே பாதிக்­கப்­படும். 

இப்­போது கூட அவரின் செயற்­பா­டுகள் அவ்­வாறு தான் உள்­ளன. மேடைப் பேச்­சுக்­களின் போது என்ன பேசு­கின்றோம் என்று தெரி­யா­ம­லேயே பேசிக் கொண்­டி­ருக்­கின்றார். அர­சாங்­கத்தால் கடன் பெறப்­பட்­டுள்­ளது. ஆனால் அது பற்­றிய எந்த தக­வலும் இல்லை, அந்த கடன் தொகைக்­கான வேலைத்­திட்­டங்­களும் நடை­பெ­ற­வில்லை எனக் கூறு­கின்றார். அப்­ப­டி­யென்றால் அந்த பணத்­திற்கு என்ன நடந்­தது என ஜனா­தி­பதி தான் கூற வேண்டும். 

என்­னு­டைய அர­சாங்கம் தான் பாரிய கடன்பெற்­றது என இவர்கள் குறை கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். நான் பெற்ற கடனில் ஆட்­சியை இவர்­க­ளிடம் ஒப்­ப­டைக்கும் போது 70 வீத அபி­வி­ருத்­தியை செய்­தி­ருந் தேன். ஆனால் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று வரு­டங்கள் பூர்த்­தி­யா­கியும் நான் பெற்­றதை விடவும் அதிக கடனை மாத்­தி­ரமே பெற்­றுள்­ளார்­களே தவிர நூற்­றுக்கு 30 வீத அபி­வி­ருத்தி கூட  மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

என்னால் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்­க­ளையும் நிறுத்­தி­விட்­டார்கள். ஒரு முறை மக்கள் ஏமாந்து விட்டார்கள். மீண் டும் மீண்டும் அவர்களை ஏமாற்ற  முடி யாது. மீண்டும் ஏமாற மக்கள் தயாராகவும் இல்லை. எனவே இம்முறை தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் சிந்தித்து வாக்க ளிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46