பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 14 ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நாளை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விசேட கூட்டமொன்றிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதால் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் சமுகமளிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன்று நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளமை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைவாக நாளை காலை 10.30 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இந்த விவாதம் நடைபெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதியிலிருந்து இரண்டு நாட்களுக்கு இந்த விவாதத்தை நடத்துவதற்கு கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM