(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் நோக்கிலா மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் அர்ஜுன அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனரென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள பிணைமுறி விவாதம் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் நோக்கிலேயே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இது முழு மோசடியையும் மூடி மறைக்கும் அரசியல் சூழ்ச்சியாகவே காணப்படுகின்றது.
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் பிரதமர் பிரதான குற்றவாளி என மறைமுகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.தேசிய அரசாங்கத்திற்கு தெரியாத உண்மைகள் தற்போது பொது மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.
இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலினையும், பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள பினணைமுறி விவகாரத்தில் தமக்கான சாதகத் தன்மையினை பலப்படுத்தவே தற்போது குறித்த கைதுகள் இடம் பெற்றுள்ளன.
10 ஆம் திகதிக்கு பின்னர் இடம் பெறும் பாரிய மாற்றத்தினை நல்லாட்சி அரசாங்கம் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM