மாணவர்களிடம் பணம் அற­வி­டப்­பட்டால் கடும் நட­வ­டிக்கை.!

Published By: Robert

05 Feb, 2018 | 08:48 AM
image

கல்வி அமைச்சின் மூல­மாக பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கின்ற சுரக் ஷா காப்­பு­றுதி திட்­டத்­திற்கு மாண­வர்­களை பதிவு செய்­கின்ற பொழுது ஒரு சில பாட­சா­லை­களில் ஆசி­ரி­யர்கள் பணம் அற­வி­டு­வ­தாக எனக்கு பெற்­றோர்­களால் புகார் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்வாறு பணம் அற­வி­டு­வது சட்­டப்­படி குற்­ற­மாகும். அவ்­வாறு பணம் கேட்­கின்ற ஆசி­ரி­யர்கள், அதி­பர்கள் தொடர்­பாக எனது அமைச்சின் கவ­னத்­திற்கு கொண்டு வந்தால் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக கல்வி அமைச்சர் நேற்று முன்­தினம் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில், 

கல்வி அமைச்சு பாட­சாலை மாண­வர்­களின் நன்மை கருதி இல­வச காப்­பு­றுதி திட்டம் ஒன்றை தற்­பொ­ழுது அறி­முகம் செய்­துள்­ளது.இந்த காப்­பு­றுதி திட்­ட­மா­னது சுரக் ஷா என்னும் திட்­டத்தின் மூல­மாக நடை­மு­றை­ப்ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இந்த காப்­பு­றுதி திட்­டத்தின் மூல­மாக மாண­வர்­க­ளுக்கு இரண்டு இலட்சம் ரூபா வரை காப்­பு­று­தி­களை பெற்றுக் கொள்ள முடியும். அதற்­காக அனைத்து மாண­வர்­களும் தங்­களை தங்­க­ளு­டைய பாட­சா­லை­களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்­காக எந்த ஒரு கட்­ட­ணத்­தையும் பாட­சா­லையில் அதி­பர்­களோ ஆசி­ரி­யர்­களோ அற­விட முடி­யாது. இல­வ­ச­மாக பதிவு செய்து கொள்­வதன் மூலம் இந்த திட்­டத்தில் மாண­வர்­களை இணைத்துக் கொள்ள முடியும்.

மாண­வர்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற சுக­வீனம், விபத்­துகள் மற்றும் ஏனைய மருத்­துவம் தொடர்­பான பிரச்­சி­னை­களின் பொழுது அவர்கள் இந்த திட்­டத்தின் மூல­மாக பயன்­களை பெற்றுக் கொள்ள முடியும். இதன்மூலம் பெற்­றோர்­க­ளுக்கு ஏற்­படும் பாரிய சுமையை அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்­ளது.மாண­வர்கள் தங்­க­ளு­டைய 13 வருட கல்­வியை தொடர வேண்டும் என்­ப­தற்­கா­கவே இந்த திட்­டத்­தினை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றது. இதன்மூல­மாக பெற்றோர் பலன்­களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

 இந்த திட்­ட­மா­னது முழு­மை­யாக இல­வ­ச­மா­கவே வழங்­கப்­ப­டு­கின்­றது. இதற்­காக பாட­சா­லை­களில் எந்த காரணம் கொண்டும் பணம் அறவிட முடியாது. அப்படி பாடசாலைகளில் பணம் அறவிடப்பட்டால் அது தொடர்பாக என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் குறித்த அதிபர்கள், ஆசிரியர்க ளுக்கு எதிராக உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14