70 ஆவது சுதந்திர தினம் ; உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு  வாழ்த்து

Published By: Priyatharshan

04 Feb, 2018 | 03:15 AM
image

இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தேசமாக ஏழு தசாப்தங்களை கடந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பிரித்தானிய எலிசபெத் மகாராணி விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகள் சிறந்த நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய மகாராணி, எதிர்வரும் காலங்களில் இரு நாட்டு மக்களுக்கு மத்தியில் இருந்துவரும் உறவுகள் மேலும் பலமடையும் என தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்று நிகழ்வில் தனிப்பட்ட முறையில் பங்குபற்றக்கிடைக்காததையிட்டு கவலையடைவதாக குறிப்பிட்டுள்ள மகாராணியார், இந்த நிகழ்வுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தின் உறுப்பினரான இளவரசர் எட்வேட் தம்பதியினரை பங்குபற்றச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இலங்கை நல்லிணக்கம், பொறுப்புகூறல் மற்றும் நீதியான ஆட்சி என்பவற்றை சிறப்பாக முன்னெடுத்துவரும் இச்சந்தர்ப்பத்தில் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனப்பூர்வமாக வாழத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இலங்கை நல்லிணக்கத்தினதும் சுபீட்சத்தினதும் நோக்கங்களை உறுதியாக அடைந்துகொள்ளும் என்றும் அமெரிக்கா ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த தான் உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங்கும் விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை எதிர்காலங்களில் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள சீன ஜனாதிபதி, 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் பேரரசர் அக்கினோ, ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளதுடன், இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

துருக்கிய ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகான், இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கும் துருக்கிக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடன் மிக விரைவில் தான் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28