பேர்பச்சுவல் டிரஷரீஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு தடை நீடிப்பு.!

Published By: Robert

02 Feb, 2018 | 12:17 PM
image

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் சட்டமா அதிபரினால் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையைக் கவனத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், மத்திய வங்கியின் நிதி விசாரணைப் பிரிவின் பணிப்பாளரினால் கடந்த வாரம் பேர்பச்சுவல் டிரஷரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நீடிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான தீர்மானம் 30 நாட்கள் செல்லுபடியாவதுடன், அதனை மீண்டும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் காணப்படுகின்றது. பேர்பச்சுவல் டிரஷரீஸ் நிறுவனம் அல்லது அதன் சார்பில் செயற்படும் வேறு தரப்பினரால் மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கலின் மூலமாக முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட நிதி வேறு தரப்பினருக்கு வழங்கப்படுவதைத் தவிர்க்கும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம், குறித்த நிறுவனத்தினால் சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட நிதியை எதிர்காலத்தில் மீண்டும் அரசினால் அறவிடுவதற்கும் அரசுடைமையாக்குவதற்கும் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பயனற்று செல்லாது அமையும் வகையில் அந்த நிறுவனங்களின் கணக்குகளில் உள்ள நிதி பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகின்றது. பிணைமுறி கொடுக்கல் வாங்கலினால் அரசிற்கு ஏற்பட்ட இழப்பை மீண்டும் அறவிடும் செயற்பாடுகள் மற்றும் இந்த சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் வெற்றி இந்த வழக்குத் தீர்ப்பின் மூலமாக மேலும் உறுதிசெய்யப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10