அல்ஜீரிய தலைநகர் அல்ஜியர்ஸிலிருந்து பிரான்ஸின் பாரிஸ் நகரை நோக்கிப் பயணித்த விமானத்தில் பயணியொருவர் பிறிதொரு பயணி மீது சிறுநீர் கழித்ததையடுத்து கடும் மோதல் இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பாரிஸை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் எம்.எல்.2673 விமானம் 166 பயணிகளுடன் நடுவானில் பயணித்துக் கொண்டிருந்த போது, குறிப்பிட்ட மேலாடை அணியாது காணப்பட்ட பயணி மது அருந்தவும் சிகரெட் புகைக்கவும் தனக்கு அனுமதியளிக்கப்படாததால் சினமடைந்து விமான ஊழியர்களிடம் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த நபர் சக பயணி மீது சிறுநீரைக் கழிக்கவும் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
அவரை மடக்கிப் பிடிக்க விமான ஊழியர்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
இதனையடுத்து அந்த விமானம் திசை திருப்பப்பட்டு லையன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த பொலிஸாரால் சிறுநீரைக் கழித்த நபரும் பிறிதொருவரும் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் 3 மணித்தியால நேர தாமதத்தை எதிர்கொண்டு பாரிஸ் நகரிலுள்ள சார்ள்ஸ் டி கோலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM